Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்
கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்!
பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை.
பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!
இந்த கரும்புள்ளிகள் பெரும்பாலும் மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தான் வரும். இது இருந்தால் அப்பகுதி சொரசொரவென்று மென்மையின்றி இருக்கும்.
உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!
இங்கு கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு கரும்புள்ளிகளைப் போக்க உதவும். இதனை முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமத்துளைகள் இறுக்கப்படும்.

பென்டோனைட் க்ளே
பெட்டோனைட் க்ளே மாஸ்க், சருமத்துளைகளில் உள்ள எண்ணெய், அழுக்குகள் போன்றவற்றை முற்றிலும் வெளியேற்றும். இதற்கு அதில் உள்ள கனிமச்சத்துக்கள் தான் முக்கிய காரணம்.

தேன் மற்றம் பால்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் பொருளும், பாலில் லாக்டிக் அமிலமும் உள்ளது. இவை சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் தேனையும் பாலையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவி வர கரும்புள்ளிகளைத் தடுக்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து உலர வைத்து, பின் ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். அப்படி செய்வதால் அவை சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், எண்ணெய் பசை போன்றவற்றை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய்
இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகள் அகலும். முக்கியமாக இந்த முறையை பின்பற்றிய பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications