Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?
மழை நீர் சுத்தமானது. அது அழுக்குகளை களைந்து சருமத்தை சுத்தமாக்கும். அஅதனை உபயோகித்து உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யலாம். அதோடு சருமத்தை பாதுகாக்க குள்ர்கால குறிப்புகள்!
குளிர் மற்றும் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை அதிகப்படியாக பாதுகாக்க வேண்டும். அந்த சமயங்களில்தான் சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.
காரணம் போதிய அளவு நாம் நீர் அருந்த மாட்டோம். வியர்வை சுரப்பிகள் இயங்காது. இதனால் சருமத்தில் இறந்த செல்கள் தேங்கி, புதிய செல்களின் உருவாக்கும் குறைந்து சுருக்கம், சருமத்தை கீறினால் வெள்ளையாக கோடு ஆகியவை ஏற்படுகிறது.

குளிர்காலம் அப்படித்தான் இருக்குமென அப்படியே விட்டால் சுருக்கம் எற்படும். பின் எளிதில் சுருக்கங்கள் மறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் சருமத்தை குளிர்காலத்தில் காப்பாற்ற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

மழை நீர் மற்றும் தேன் :
தேவையானவை :
மழை நீர் 1 கப்.
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
மழை நீரில் தேனை கரையும் வரை கலந்திடுங்கள். பின்னர் அதனை முகம் மற்றும் கைகளில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கழுவினால் சருமம் மினுமினுக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
கற்பூரம்- 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - கலக்க தேவையானது.

செய்முறை :
முல்தானிமட்டியில் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துங்கள். அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டரை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கவும்.
காய்ந்தம் கழுவுங்கள். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறைந்துவிடும். சுருக்கங்கள் மறைந்து சருமம் மறையும். ஈரப்பதம் தேவையான அளவு இருக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
சந்தனப் பொடி - 2 ஸ்பூன்
துளசி இலை - 10 இலைகள்
கிராம்பு எண்ணெய்- 1 துளி
ரோஸ் வாட்டர் - கலக்க தேவையான அளவு

செய்முறை :
இவை எல்லாவற்றையும் கலந்து முகத்தில் போடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும். அதோடு சருமப் பொலிவை தரும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
வேப்பிலை பேஸ்ட் - 2 ஸ்பூன்
கிராம்பு எண்ணெய் - 2 துளி

செய்முறை :
இந்த எல்லாபொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து முகத்தில் தடவவும். முகப்பருக்கள், கருமை, மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications











