Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்...
எப்படியோ கோடைக்காலம் போய் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தினர் அதிகப்படியான சரும பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். மழைக்காலம் ஆரம்பித்ததும், அனைவரும் குதூகலத்துடன் மழையில் நனைய விரும்புவோம். ஆனால் சருமமானது மழைக்காலத்திற்கு ஏற்றவாறு மாறியிருக்காது. எனவே எந்த ஒரு பருவகாலம் வந்தாலும், சருமத்தை முறையாக பராமரித்தால் தான் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள முடியும்.
இங்கு எண்ணெய் பசை சருமத்தினர் மழைக்காலத்தில் தங்கள் சருமத்தை எப்படியெல்லாம் பராமரித்தால் அழகாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அதன் படி நடந்து வந்தால், மழைக்காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் அழகாக வைத்துக் கொள்ளலாம்.

கிளின்சிங்
இந்த முறையை அனைத்து வகையானது சருமத்தினரும் பின்பற்ற வேண்டும். இதனால் சருமத்துளைகளில் இருந்து எண்ணெய் அதிகம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். அதற்கு தினமும் மூன்று முறை மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். அத்துடன் வாரம் இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

டோனிங்
அடுத்தபடியாக டோனிங் செய்ய வேண்டும். இப்படி டோனரைக் கொண்டு சருமத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும். அதிலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுப்பது மிகவும் சிறந்தது.

மாய்ஸ்சுரைசர்
எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். இதனால் பலர் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் சருமத்தை பராமரிக்க மாய்ஸ்சுரைசர் மிகவும் அவசியம். எனவே நீர்ம நிலையில் உள்ள மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்போடும் இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க் போடுவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலமிச்சை, தேன், ஓட்ஸ், பால், பப்பாளி, வெள்ளரிக்காய், கற்றாழை, தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி வாரம் 1-2 முறை மாஸ்க் போடுவது நல்லது.

உணவுகள்
சருமத்தின் ஆரோக்கியமானது உண்ணும் உணவுகளைக் கொண்டும் உள்ளது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டாம். மாறாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை டயட்டில் அதிகம் சேர்த்து வாருங்கள். குறிப்பாக தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், சருமமானது மென்மையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











