Latest Updates
-
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
முப்பது வயதை எட்டும் திருமணமாகாத இந்திய ஆண்கள் விரும்பும் விஷயங்கள்!!!
முப்பது வயது என்பது ஒவ்வொரு மனிதனும் ஏறத்தாழ அவனது வாழ்க்கை என்ன? அவன் என்னவாக ஆக வேண்டும் என்ற பாதை அறிந்து பயணம் செய்யும் வயது. இந்த வயதில் கட்டாயம் அடைந்தே தீர வேண்டும் என்ற சில ஆசைகள் அனைவருக்குள்ளும் இருக்கும்.
பொதுவாக நமது இந்தியாவில் முதல் பத்து வயது வாழ்கையை விளையாடியே கழிக்கிறோம், அடுத்த பத்து வயதில் வாழ்க்கை நம் வாழ்வில் விளையாடிவிடுகிறது. அடுத்து வரும் பத்து ஆண்டுகளில், எவனெவனோ விளையாடுவான், கல்லூரி, வேலை, சம்பளம், போட்டி, பொறாமை என்று பலவன கடந்து செல்லும்.
இதெல்லாம் முடிந்து முப்பதை தொட்டு நிற்கும் போது நமது இந்தியாவில் இருக்கும் திருமணமான ஆண்கள் என்னெவெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா....

தங்களுக்கென்று ஒரு துணை
பொதுவாக முப்பது வயதை எட்டும் நிலையில் நண்பர்கள் பலரும் திருமணமாகி குடும்பமாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். எனவே, தங்களுடன் இருக்க வேண்டும் என்று ஒரு துணையை தேடுவார்கள். அது காதலாக இருக்கலாம் அல்லது திருமண ஆசையாக இருக்கலாம்.

உடலுறவு
இப்போதெல்லாம் பருவம் எட்டும் போதே பலருக்குள் உடலுறவு மீதான மோகம் ஏற்பட்டுவிடுகிறது. பின் இவர்களக்கு இருக்காதா என்ன. பொதுவாகவே பாலினம் பாகுபாடு இன்றி, வயது ஏற, ஏற உடலுறவு மீதான ஏக்கமும், மோகமும் அதிகரித்து விடும் என்பது உளவியல் கூற்று.

மாலை பொழுது
முப்பது வயதை கடந்த ஆண்கள், அவர்களது மாலை பொழுதை அழகாக கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பொதுவாக அது ஒரே ஒரு நபருடன் தான் கழிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது ஒரு பெண்ணாக இருக்க தான் விரும்புவார்கள். வேறு என்ன காதல் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான். (ஆனா, இந்த காலத்துல இது ரொம்ப லேட்டு பாஸ்!!!)

விளையாட்டுத்தனம் இருக்காது
இந்த வயதில் அவர்கள் விளையாட்டுத்தனம் இன்றி, நாடகத்தனம் இன்றி மிகவும் தீவரமாகவும், உண்மையாகவும் வாழ்க்கையை நடத்த விரும்புவர்கள். உறவிற்கு மத்தியில் நேர்மையை மட்டுமே எதிர்பார்பார்கள்.

ஊக்குவிக்கும் பண்புடைய பெண்
இந்த வயதில் உடல், மோகம் என்பதனை தாண்டி தன்னை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு பெண்ணின் துணை வேண்டும் என்பதே அவர்களது ஆசையாக இருக்கும்.

தன்னம்பிக்கை
அந்த பெண் தன்னம்பிக்கையுடன் தன்னுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, முப்பது வயதை கடந்த ஆண்களுக்கு இருக்கும். இது, வேறு வகையான முதிர்ச்சியான காதலின் வெளிப்பாடாக இருக்கும்.

புது அனுபவம்
தான் விரும்பும் அந்த பெண்ணுடன் ஒரு புதிய அனுபவம் தரும் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்! நீண்ட நாள் கழித்து மலரும் அந்த காதலில், ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத நினைவு கூறும் வகையிலான நாளாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் இருக்கும்.



Click it and Unblock the Notifications











