Latest Updates
-
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்.. -
இந்த 4 ராசி ஆண்கள் மனைவி மீது உண்மையான அக்கறை செலுத்தும் அன்பான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா? -
புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்.. -
கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
கத்திரிக்காய் வாங்குனா இந்த அரைச்சுவிட்ட மசாலா குழம்பை ட்ரை பண்ணுங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு வேகமாக வயது ஏறி முதுமை வந்துருமாம் -
ஜூலை 04-ல் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு பணம், புகழ், வெற்றி எல்லாம் தேடி வரப்போகுது! -
பச்சை பயறு இட்லியும், கார மற்றும் தேங்காய் மல்லி சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்!!!
இல்லற வாழ்க்கையில் படுக்கையறை மட்டுமே இன்பத்தை தருவது அல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கைந்து மாதங்கள் கூட தாண்டாது தாம்பத்திய வாழ்க்கையின் மூலம் தம்பதியர்கள் அடையும் இன்பம். "இச்சை" அறுபது வரை இருந்தாலும், முதுமையில் அசைபோட நல்ல நினைவுகள் மிச்சம் இருக்க வேண்டும். இல்லையேல் அந்த வாழ்க்கை வெறும் பாகற்காய் தான்.
"கட்டுனா குஜாரத்தி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..", ஏன்னு தெரியுமா???
கணவன் மனைவி வாழ்க்கையில் கட்டிலையும், கட்டியணைப்பதையும் தாண்டி எட்டிப்பார்க்க வேண்டிய எவ்வளோவோ விஷயங்கள் இருக்கின்றன. கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது, மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது, குழந்தைகள் பெற்றோரிடம் எதுர்பார்ப்பது என இந்த எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே போகும்.
ஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்!!!
எதிர்பார்ப்பு என்ற எண்ணம் எழும் முன்னரே, அதை பூர்த்தி செய்வது தான் சிறந்த வாழ்க்கையாக அமைகிறது. இதற்கு பணம் ஓர் தடையல்ல. ஏனெனில் இவை யாவும் மனம் சார்ந்தது. இந்த வகையில், தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்....
திருமண வாழ்வில் மட்டுமே நடக்கும் முற்றிலும் குசும்புதனமான செயல்பாடுகள்!!!

உண்மை நேர்மை
பரிசுகள், தங்க நகைகள், இன்ப சுற்றுலா எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில் தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள, கணவன் எங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும் என்கிறார்கள் பெண்கள். (இது தானே கொஞ்சம் கஷ்டம்!!)

பொய்கள் வேண்டாம்
எந்த விஷயமாக இருந்தாலும் உடனே கூறிவிடுங்கள் என்று கூறுகிறார்கள் பெண்கள். ஏனெனில், நீண்ட நாள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டால் அது, சிறிய பொய்யாக இருந்தாலும் கூட விளைவு பூதாகரமாக விளையும் என்று பெண்கள் கூறுகிறார்கள்.

நேரம்
எவ்வளவு நேரம் காத்திருக்கவும் தயார், ஆனால் சரியான நேரம் சொல்லிவிட்டு வாருங்கள். இதோ வருகிறேன், அதோ வந்துவிட்டேன் என்று தாமதிக்க வேண்டாம். ஏனெனில், இதுப் போன்ற விஷயங்களுக்கு தான் பெண்கள் அதிகமாக சட்டென்று கோபம் அடைகின்றனர்.

புரிந்துக் கொள்ளுதல்
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எங்களை நீங்கள் புரிந்துக் கொண்டாலே போதும், நாங்கள் சந்தோசமாக தான் இருப்போம் வேறு எதுவும் வேண்டாம் என்கிறார்கள் தாய்க்குலங்கள். புரிதல் தான் உறவின் அஸ்திவாரம் என்கிறார்கள், உண்மை தான்.

உணர்வால் இணைந்திருங்கள்
நீங்கள் வேலைக் காரணமாகவோ, நட்பு வட்டாரத்தின் வற்புறுத்துதலின் காரணமாகவோ எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எங்களோடு உணர்வால் இணைந்திருங்கள். வீட்டை விட்டு வெளியில் சென்றதும், வீடோடு சேர்ந்து எங்களையும் மறந்துவிட வேண்டாம். சிறிது நேரம் அலைப்பேசியில் அழைத்தாவது பேசுங்கள் என்று தங்களது குமுறல்களை கொட்டுகின்றனர் பெண்கள்.

எங்களது பலமாக இருங்கள்
பதியாக பட்டுமின்றி, எங்கள் பாதியாகவும், உறுதுணையாகவும் இருந்து எங்கள் பலமாக இருங்கள். தவறுகள் திருத்திக்கொள்ள கற்றுக்கொடுங்கள், குத்திக் காட்ட வேண்டாம் என்கிறார்கள் பெண்கள். கணவனாக மட்டுமின்றி நல்ல தோழனாக இருந்து தோள் கொடுங்கள் என்கிறார்கள். (சரிதானே!!!)

பாதுகாப்பு
ஒவ்வொரு ஆண்மகனின் கடமை இது, அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டியது. ஆண்களிடம் இருந்துபெண்களை ஆண்களே பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் தனது கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது, நம்புவது அவளுக்கனா முழு பாதுகாப்பு தான்.



Click it and Unblock the Notifications