Just In
- 27 min ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 2 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 6 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
Don't Miss
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராக்கி ஸ்பெஷல்: பன்னீர் அட்ரகி
ரக்சா பந்தன் அன்று இனிப்புக்களை மட்டும் தான் சமைத்து அண்ணன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அப்போது சற்று வித்தியாசமாக, ஏதேனும் ஸ்பெஷலான சைடு டிஷ்களையும் செய்து கொடுத்து அசத்தலாம். அதற்கு பன்னீர் அட்ரகி சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலானோருக்கு பன்னீர் மிகவும் பிடித்தமான உணவுப் பொருள் என்பதால், இந்த பன்னீரைக் கொண்டு அருமையான முறையில் ஒரு ரெசிபி செய்து அசத்தலாம்.
இப்போது அந்த பன்னீர் ரெசிபியில் ஒன்றான பன்னீர் அட்ரகியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அட்ரகி என்பது இஞ்சியை அதிகம் போட்டு செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இஞ்சி
-
2
(1
இன்ச்
அளவு,
தோலுரித்து
நறுக்கியது)
பன்னீர்
-
200
கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம்
-
3
(நறுக்கியது)
இஞ்சி
பேஸ்ட்
-
1
டேபிள்
ஸ்பூன்
பூண்டு
பேஸ்ட்
-
1
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
2
(நீளமாக
கீறியது)
தக்காளி
-
3
(அரைத்தது)
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
மிளகு
தூள்
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
எலுமிச்சை
சாறு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
கசகசா
-
1
டேபிள்
ஸ்பூன்
கொத்தமல்லி
-
2
டேபிள்
ஸ்பூன்
(நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
தண்ணீர்
-
1/2
கப்
செய்முறை:
முதலில் கசகசா மற்றும் சீரகத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, பாதி இஞ்சியைப் போட்டு, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு கசகசா பேஸ்ட், மிளகு தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் விதக்க வேண்டும்.
பின்பு பன்னீர் துண்டுகளைப் போட்டு, நன்கு கிளறி விட்டு, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்து, பன்னீர் துண்டுகள் வெந்ததும், கரம் மசாலாவைத் தூவி கிளறி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பன்னீர் அட்ரகி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, மீதமுள்ள இஞ்சியைப் போட்டு பரிமாற வேண்டும்.