Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பேச்சுலர்களுக்கான... மணத்தக்காளி வத்தக் குழம்பு
வாரம் ஒருமுறை மணத்தக்காளியை உணவில் சேர்த்து வந்தால், வாய் மற்றும் வயிற்று அல்சர் குணமாகும். அது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதிலும் மணத்தக்காளி வற்றவை குழம்பு செய்து சாதத்துடன் சாப்பிட்டால், அதன் சுவைக்கு இணை வேறு எதுவும் வராது.
இங்கு பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் காலையில் எழுந்து சீக்கிரம் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான மணத்தக்காளி வத்தக் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வற்றல் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (தட்டியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, 1 1/2 கப் புளிச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசி மாவை சிறிது நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயப் பொடி, சீரகப் பொடி, வரமிளகாய், பெருங்காயத் தூள், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறி, அடுத்து புளிச்சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு புளியின் பச்சை வாசனை போன பின்னர், அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, அடுத்து நீரில் கலந்த அரிசி மாவை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், மணத்தக்காளி வத்தக் குழம்பு ரெடி!!!
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications