Just In
- 19 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தேங்காய் புளிக் குழம்பு சமைக்கும் போது நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டியவை!
புளிக்குழம்பு வீட்டில் செய்யும் போது முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
பொதுவாக புளிக் குழம்பில் காய்கறிகளைத் தான் சேர்த்து சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் தேங்காய் புளிக் குழம்பில் காய்கறிகளை சேர்க்காமல், அதற்கு பதிலாக தேங்காயை சேர்த்து செய்தால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த குழம்பை கிராமப் பகுதிகளில் அதிகம் செய்து சாப்பிடுவார்கள்.
இப்போது அந்த தேங்காய புளிக் குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, குழம்பு எப்படி இருந்தது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்
-
1/2
மூடி
(நீளமாகவோ
அல்லது
பொடியாகவோ
நறுக்கியது)
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
புளி
-
1
எலுமிச்சை
அளவு
(நீரில்
ஊற
வைத்தது)
பூண்டு
-
15
பல்
(நறுக்கியது)
குழம்பு
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1/2
டீஸ்பூன்
வெந்தயம்
-
1/2
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
கறிவேப்பிலை
-
சிறிது
நல்லெண்ணெய்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் நீரில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியையும் அத்துடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும் .
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான தேங்காய் புளிக் குழம்பு ரெடி!!!
Image Courtesy: simplehomefood