Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
1 கப் தயிர் இருந்தா போதும்.. 5 நிமிடத்தில் சிம்பிளான குழம்பு செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Quick Morkuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளா சமையலை முடிக்க நினைக்குறீங்களா? அதுவும் வெறும் 5 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் 1 கப் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த தயிரைக் கொண்டு 5 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஒரு குழம்பு செய்யலாம்.
குறிப்பாக இந்த குழம்பிற்கு காய்கறிகள் எதுவும் தேவைப்படாது. இந்த மோர் குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக பேச்சுலர்கள் கூட இந்த மோர்குழம்பை செய்யலாம். இப்படி குழம்பை செய்யும் போது குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மோர்குழம்பை 5 நிமிடத்தில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மோர்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
* பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தயிரை எடுத்து, நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் முழுதாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து, பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, கொதிக்க விடாமல் வெறும் 2 நிமிடம் சூடேற்றி, பின்
அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான மோர்குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











