இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Kadamba Chutney Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை தான் உங்கள் வீட்டில் செய்வீர்களா? அதற்கு தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கதம்ப சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Kadamba Chutney How To Make a Kadamba Chutney Recipe

உங்களுக்கு கதம்ப சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கதம்ப சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - 1/2 கைப்பிடி

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை அரைத்த சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கதம்ப சட்னி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 24, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion