Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
3 தக்காளி இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படியொரு சாம்பார் செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Instant Tomato Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? இன்னும் இல்லையா? இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் தான் சரியான காம்பினேஷன். இன்று உங்கள் வீட்டில் சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 3 தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். வீட்டில் உள்ள குறைவான பொருட்களைக் கொண்டே இட்லி தோசைக்கு அருமையான சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த சாம்பார் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சாம்பார் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பிறகு 2 ஸ்பூன் கடலை மாவை, 3 கப் நீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி
கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் பச்சை வாசனை போய் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்க்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி
சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











