Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னிக்கு வெங்காயம், பூண்டு தேவையில்ல...!
Chettinad Tomato Pudina Chutney Recipe in Tamil: சுவையான உணவுகள் என்றாலே தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். அந்த அளவிற்கு செட்டிநாடு உணவுகளின் சுவையும், தனித்துவமும் புகழ்வாய்ந்தவை.
இட்லி, தோசை என்று வரும்போது எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் செட்டிநாடு ஸ்டைல் சட்னி அரைக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான செட்டிநாடு சட்னிதான் தக்காளி புதினா சட்னி.

இந்த தக்காளி புதினா சட்னிக்கு வெங்காயம், பூண்டு மற்றும் தேங்காய் போன்ற எதுவுமே தேவையில்லை. எளிதில் செய்யக்கூடிய இந்த சட்னி டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதத்திற்கு கூட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் செட்டிநாடு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- நறுக்கிய தக்காளி - 1 கப்
- புதினா இலைகள் - 1/4 கப்
- கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 5
- எண்ணெய் - வதக்க 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - தாளிக்க 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
- உடைத்த உளுந்து - 1/2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போடவும். சீரகம் வெடித்ததும் அதில் வர மிளகாயை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சிறிது வதக்கவும். பழுப்பு நிறமாக மாறாமல், அவை சுருங்கும் வரை வதக்கவும்.
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வெந்தவுடன், முழுவதுமாக ஆறவிடவும். மிக்சியில் இந்த கலவையைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரவென்று அரைக்கவும்.
- பேஸ்ட் போல அரைக்கக் கூடாது, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக தெரிவது போல இருக்க வேண்டும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதை தாளிக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும், அதன்பின் உளுந்து சேர்த்து அதை சட்னி மீது ஊற்றவும்.
- சூப்பரான செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு இது சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











