Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
தீபாவளிக்கு நாட்டுக்கோழி வாங்குனா இந்த செட்டிநாடு நாட்டுக்கோழி பிரட்டல் செய்யுங்க... அசத்தலா இருக்கும்...!
Chettinad Nattukozhi Pirattal Recipe in Tamil: மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. தீபாவளி என்றாலே புத்தாடையும், கறிக்குழம்பும்தான். தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை உடுத்தி கறிக்குழம்பை ஒரு பிடி பிடித்தால்தான் தீபாவளி முழுமையடையும். புரட்டாசி மாதம் முடிந்து விட்டதால் அனைத்து வீடுகளிலும் இப்போது அசைவ உணவை செய்ய ரெடியாக இருப்பார்கள்.
தீபாவளி நாளில் சிலர் மட்டன் வாங்குவார்கள், சிலர் நாட்டுக்கோழி வாங்குவார்கள். அப்படி நீங்கள் நாட்டுக்கோழி வாங்கினால் அதை வழக்கம் போல சமைக்காமல் இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி பிரட்டல் செய்து பாருங்கள். இந்த நாட்டுக்கோழி பிரட்டல் உங்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி பிரட்டலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

- நாட்டுக்கோழி - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 2
அரைக்க:
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 15 பல்
- கிராம்பு - 3
வறுத்து பொடியாக அரைக்க:
- சோம்பு - 2 ஸ்பூன்
- சீரகம் - 3 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- சோம்பு - அரை ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 4
- கல்பாசி - சிறிதளவு
- அன்னாசி பூ - 2
பொடி வகைகள்:
- மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- நாட்டுக்கோழியை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி பின் அதில் சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம், மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும்.பின் அதை ஆற விட்டு மிக்சியில் உலர அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
- அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு ,கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.
- பின்னர் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம்,சோம்பு,மிளகு
கலவையையும்
போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதன் பிறகு நாட்டுக்கோழியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதன் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூளை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- நாட்டுக்கோழி முக்கால் பதம் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- சிக்கன் வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கினால் செட்டிநாடு நாட்டுக்கோழி பிரட்டல் ரெடி!



Click it and Unblock the Notifications











