Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி... செஞ்சு பாருங்க... காரமும், டேஸ்ட்டும் தாறுமாறா இருக்கும்...!
Andhra Green Chilli Chutney Recipe in Tamil: பொதுவாக ஆந்திரா ஸ்டைல் உணவுகள் என்றாலே காரசாரமாகத்தான் இருக்கும். ஆந்திர உணவுகள் எவ்வளவு காரமாக இருக்கிறதோ அதேயளவிற்கு சுவையானவையும் கூட. ஆந்திராவில் பிரியாணி மட்டுமல்ல பல சுவையான உணவுகள் உள்ளன. ஆந்திராவில் இட்லி, தோசைக்கு பரிமாறப்படும் சட்னிகள் கூட தனித்துவமானதாகவும், காராமானதாகவும் இருக்கும்.
அந்த வகையில் காரமான பச்சை மிளகாய் சட்னி ஒன்று தயாரிக்கப்படுகிறது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதை 1 வாரத்திற்கும் மேல் வைத்து சாப்பிடலாம். இந்த பதிவில் காரமான ஆந்திரா பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கருப்பு உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 300 கிராம் காரமான பச்சை மிளகாய்
- 4 - 5 ஸ்பூன் ஸ்பூன் எண்ணெய்(மிளகாய் வறுக்க)
- 3 - 4 ஸ்பூன் கெட்டியான புளி சாறு
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு விதைகள் வெந்தய விதைகளைச் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- வறுத்த வெந்தயத்துடன், உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் மென்மையான பொடியாக அரைக்கவும்.
- அதே வாணலியில், எண்ணெயை சூடாக்கி, மிளகாய்களைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- மிக்ஸியில் சமைத்த மிளகாயைச் சேர்த்து, புளிச் சாறு, வெல்லம், உப்பு மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வெளியேயும், 15 நாட்கள் குளிர்சாதன பெட்டியிலும் கெட்டுப்போகாமல் இருக்கும், தண்ணீர் அதில் படாமல் இருந்தால் போதும்.
- இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம், இல்லையெனில் சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.
- மிக்ஸியில் முதலில் தாளித்த பிறகு மிளகாய்களை அரைக்க வேண்டும். மசாலா பொருட்களை அதனுடன் சேர்த்து அரைக்கக்கூடாது.
- நீங்கள் சட்னியை தாளிக்க விரும்பினால் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.



Click it and Unblock the Notifications











