Latest Updates
-
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!!
கருத்தடை மாத்திரைகள் என்பது தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் இந்த மாத்திரைகள் சாதாரணமாகவே மருந்தகங்களில் கிடைக்கின்றன. புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு வரப்ரசாதமாக திகழ்கிறது.
உடலில் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
ஆனால், இந்த வரப்ரசாத்தில் இருக்கும் விஷமம் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதனாலும், முறை தவறி பயன்படுத்துவதனாலும் ஓர் கட்டத்தில் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.
ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
கருக்கலைப்பு செய்வதனால் பெண்களுக்கு உடல்நிலை வலுவிழக்கிறது என்பதனால் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இனி காணலாம்....
காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

வயது வரம்பு
கருத்தடை மாத்திரைகள் 25 - 45 வயதுள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலுமான மக்களுக்கு தெரிவதில்லை. பதின் வயது பெண்கள் இதை உட்கொண்டால் நிரந்திரமாக அவர்களால் கருத்தரிக்க முடியாத அளவு பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் இடையூறு
கருத்தடை மாத்திரை என்பது அவசர தேவைக்கானது ஆகும். சிலர் அடிக்கடி இதை உட்கொள்வதனால் மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்பட இவை காரணமாகிவிடுகின்றன.

உறவில் நாட்டம் குறைபாடு
அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதனால் உடலுறவில் நாட்டம் குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். இது, உணர்சிகளை குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பக்க விளைவுகள்
அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதனால், குமட்டல், தலைவலி, வாந்தி, கீழ் வயிற்று வலி, உடல் எடை அதிகரித்தல், மாதவிடாய் தள்ளிபோவது, மார்பகங்கள் உணர்ச்சி மாற்றம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமாம்.

எடுத்துக் கொள்ள வேண்டிய முறை
பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொண்ட உடனேயே அல்லத 48 மணிநேரத்திற்குள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லை எனில் அது வேலை செய்யாது!



Click it and Unblock the Notifications