Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
ஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்?
குழந்தை உணவு பற்றியும் அவர்களுக்குக் கொடுக்கும் இணை உணவுகள் பற்றியும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாதத்திற்கு பின்பு தான் தயாராகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பாக இணை உணவுகள் கொடுக்கும் பொழுது,

தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் குடிக்கும் முறைகள், தடவைகள் ஆகியவை குறைந்து தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிட ஆரம்பிக்கும்.

இணை உணவுகள்
ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் தான் இணை உணவுகள் எணப்படும். இவைகள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டதாக இருக்கின்ற பொழுது, குழந்தை எளிதில் பழகிவிடும்.
ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும் வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி, இருப்பதால் இது சுலபமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். அதேபோல் இணை உணவு ஆரம்பிப்பதை ஆறு மாதத்திற்குப் பின் தள்ளிப்போடவும் கூடாது. நம்முடைய முன்னோர்கள் அன்னம் குழந்தைக்கு ஊட்டுவதை ஆறு மாதத்துக்குப் பின்பும் அதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்திருந்தனர்.

வீட்டு உணவுகள்
பொதுவாக குழந்தைகளுக்கு டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு அவ்வப்போது வீட்டுப் பக்குவத்தில் கொஞ்சம் குழைவாக ரசாயனங்கள் கலக்காத பொருள்கள் சேர்த்து ஆரோக்கியமாக சமைப்பது நல்லது.

ரெடிமேட் உணவுகள்
அடைத்து விற்கப்படுகின்ற உணவுகளில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் இனிப்பும் ரேசாயனப் பொருள்களும் நறுமணமும் கலந்து இருக்கும். உணவு பழகுகின்ற பருவமான ஆறு மாதத்திலிருந்து 10 மாதங்கள் வரை எந்த உணவினை கொடுக்கிறோமோ அதனுடைய ருசிக்கு ஏற்றபடி மாறிவிடுகிறது.

எப்படி கொடுக்கலாம்?
முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு அரிசிக்குக் கஞ்சி மற்றும் பருப்புக் கஞ்சி, காய்கறி, கீரை வேகவைத்த தண்ணீர் (சூப்), முளைகட்டிய பயறுகளை வறுத்து அரைத்து வீட்டிலேயே அரைத்த சிறுதானியங்களில் செய்த கஞ்சியைக் கொடுப்பது, நல்லெண்ணெயை அல்லது நெய்யோ சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற மென்மையான உணவுகளை 6 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது.

6 மாதம் முதல் 12 வரை
இட்லி, தோசை, காரம் சேர்க்கப்படாத சாம்பார், உப்பு மட்டும் சேர்க்கப்பட்ட பருப்பு, காய்கறிகள் மசித்தது போன்ற உணவுகள் கொடுகு்கலாம்.
அரிசி சாதம், பருப்பு, நெய், ராகி கூழ், வாழைப்பழம், பொங்கல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
ஆனால் 12 மாதங்கள் வரையிலும் குழந்தை சாப்பிட ஆரம்பித்துவிட்டதும் தாய்ப்பாலை நிறுத்திவிட வேண்டாம். தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.



Click it and Unblock the Notifications











