Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகம காரணத்த தெரிஞ்சிக்கோங்க!
தேங்காய் உடைக்கும் செயல் வெறும் சடங்கு மட்டுமல்ல, முழு உணர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதற்கு காரணம் இருக்கிறது.
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய். தேங்காய் இல்லாத சுப நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். சில நேரங்களில் துக்க காரியங்களுக்கு கூட தேங்காயை பயன்படுத்துகிறார்கள். தேங்காய் நம் உணவில் மட்டுமல்லாது சடங்குகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. புதிய வீடு கட்டியிருந்தாலும் சரி, கார் வாங்கினாலும் சரி, புதிய தொழில் தொடங்கினாலும் சரி, சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் இந்து பாரம்பரியம் இந்தியா முழுவதும் அப்படியே உள்ளது. தேங்காய் உடைக்கும் செயல் வெறும் சடங்கு மட்டுமல்ல, முழு உணர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதற்கு காரணம் இருக்கிறது.

தேங்காய் உடைக்கும் சடங்கு செழிப்பை ஈர்க்கும் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை கூட தீர்க்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த சடங்குடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வு மற்றும் நடைமுறைக்கு பின்னால் உள்ள சரியான காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?
தேங்காயை உடைத்து கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதன் அடையாளச் செயலாகும். திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள், புதிய வீடு, கார் அல்லது நிலம் வாங்குதல் அல்லது புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றின் போது தேங்காய் உடைப்பது இந்து பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் வேப்ப மரத்தைப் போலவே ஒரு தென்னை மரமும் மங்களகரமானது. தென்னை மரத்தை அழிப்பவன் தானே அழிந்துவிடுவான் என்று சொல்லும் அளவுக்கு தென்னை முக்கியமானது.

வரலாற்று இணைப்பு
புராணங்களின்படி, விஷ்ணு பூமியில் அவதரித்தபோது, அவர் மனிதகுலத்தின் நலனுக்காக லட்சுமி தேவி, ஒரு தென்னை மரம் மற்றும் காமதேனு பசுவை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களின் அடையாளமாக தேங்காய் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேங்காய் உடைப்பதற்கான காரணங்கள்
'தேங்காய் உடைத்தல்' சடங்கில் ஈடுபடும் ஒவ்வொரு அடியும் அதனுடன் ஆழமான அர்த்தம் இணைக்கப்பட்டுள்ளது. முதல் படியாக, தென்னையிலிருந்து உமி கிழிக்கப்படுகிறது. இது நாம் விட்டுவிட வேண்டிய உள் ஆசைகள் மற்றும் பொருள் ஆசைகளை குறிக்கிறது. அடுத்து, தேங்காயை தரையில் அடித்து உடைப்பது நாம் உடைக்க வேண்டும் என்ற அகங்காரத்தை குறிக்கிறது.

தேங்காய் பிரசாதம்
தேங்காய் உடைந்ததும் அதிலிருந்து தேங்காய் தண்ணீர் வெளியேறும். இது மனதிலிருந்தும் உடலிலிருந்தும் வெளியேற வேண்டிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. தேங்காயின் மென்மையான உள் பகுதி அமைதியைக் குறிக்கிறது. இதனால் தேங்காய் மக்களிடையே பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த்தும்
தேங்காய் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பச்சை தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
தேங்காய் மட்டுமல்ல, அதன் தண்ணீரும் ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துவது முதல் எடை இழப்புக்கு உதவுவது வரை, கோடையில் நீரேற்றமாக இருக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட பானம் தேங்காய் தண்ணீர். தேங்காய் நீர் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், சிறுநீரக கல் உருவாவதை தடுக்கவும், மூட்டு வலியை குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கூட நிர்வகிக்கவும் முடியும்.



Click it and Unblock the Notifications











