Just In
- 1 hr ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 2 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
- 2 hrs ago
மா இலைகளை இப்படி சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் வராதாம் தெரியுமா?
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும்...
Don't Miss
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு.. படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Movies
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
- News
பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்!
- Technology
நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?
- Sports
"ஆத்தாடி.. இவ்ளோ உயரமா?? " போல் வால்ட்டில் உலக சாதனை படைத்த ஸ்வீடன் வீரர்.. வியப்பில் ரசிகர்கள்!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகம காரணத்த தெரிஞ்சிக்கோங்க!
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய். தேங்காய் இல்லாத சுப நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். சில நேரங்களில் துக்க காரியங்களுக்கு கூட தேங்காயை பயன்படுத்துகிறார்கள். தேங்காய் நம் உணவில் மட்டுமல்லாது சடங்குகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. புதிய வீடு கட்டியிருந்தாலும் சரி, கார் வாங்கினாலும் சரி, புதிய தொழில் தொடங்கினாலும் சரி, சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் இந்து பாரம்பரியம் இந்தியா முழுவதும் அப்படியே உள்ளது. தேங்காய் உடைக்கும் செயல் வெறும் சடங்கு மட்டுமல்ல, முழு உணர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதற்கு காரணம் இருக்கிறது.
தேங்காய் உடைக்கும் சடங்கு செழிப்பை ஈர்க்கும் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை கூட தீர்க்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த சடங்குடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வு மற்றும் நடைமுறைக்கு பின்னால் உள்ள சரியான காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?
தேங்காயை உடைத்து கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதன் அடையாளச் செயலாகும். திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள், புதிய வீடு, கார் அல்லது நிலம் வாங்குதல் அல்லது புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றின் போது தேங்காய் உடைப்பது இந்து பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் வேப்ப மரத்தைப் போலவே ஒரு தென்னை மரமும் மங்களகரமானது. தென்னை மரத்தை அழிப்பவன் தானே அழிந்துவிடுவான் என்று சொல்லும் அளவுக்கு தென்னை முக்கியமானது.

வரலாற்று இணைப்பு
புராணங்களின்படி, விஷ்ணு பூமியில் அவதரித்தபோது, அவர் மனிதகுலத்தின் நலனுக்காக லட்சுமி தேவி, ஒரு தென்னை மரம் மற்றும் காமதேனு பசுவை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களின் அடையாளமாக தேங்காய் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேங்காய் உடைப்பதற்கான காரணங்கள்
'தேங்காய் உடைத்தல்' சடங்கில் ஈடுபடும் ஒவ்வொரு அடியும் அதனுடன் ஆழமான அர்த்தம் இணைக்கப்பட்டுள்ளது. முதல் படியாக, தென்னையிலிருந்து உமி கிழிக்கப்படுகிறது. இது நாம் விட்டுவிட வேண்டிய உள் ஆசைகள் மற்றும் பொருள் ஆசைகளை குறிக்கிறது. அடுத்து, தேங்காயை தரையில் அடித்து உடைப்பது நாம் உடைக்க வேண்டும் என்ற அகங்காரத்தை குறிக்கிறது.

தேங்காய் பிரசாதம்
தேங்காய் உடைந்ததும் அதிலிருந்து தேங்காய் தண்ணீர் வெளியேறும். இது மனதிலிருந்தும் உடலிலிருந்தும் வெளியேற வேண்டிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. தேங்காயின் மென்மையான உள் பகுதி அமைதியைக் குறிக்கிறது. இதனால் தேங்காய் மக்களிடையே பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த்தும்
தேங்காய் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பச்சை தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
தேங்காய் மட்டுமல்ல, அதன் தண்ணீரும் ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துவது முதல் எடை இழப்புக்கு உதவுவது வரை, கோடையில் நீரேற்றமாக இருக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட பானம் தேங்காய் தண்ணீர். தேங்காய் நீர் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், சிறுநீரக கல் உருவாவதை தடுக்கவும், மூட்டு வலியை குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கூட நிர்வகிக்கவும் முடியும்.