For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத் தடை நீக்கும் ஆண்டாள் விரதம்!

திருமண தடை இருந்தால் எத்தனை வரன் பார்த்தாலும் முடியாது தட்டி போகும், அதுவே மன உளைச்சலை தரும். 90 கிட்ஸ் புலம்பலே இப்போது எப்போ கல்யாணம் நடக்கும் என்பதை பற்றியதாகத்தான் இருக்கிறது.

|

ஜாதகத்தில் தோஷங்களோ, களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி சரியில்லாமல் இருந்தாலோ, கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலோ திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கலையே என்ற கவலை மனதை வாட்டும். திருமண தடை நீங்க மார்கழி மாதம் திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்தால் போதும் திருமண தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும். பெண்களுக்கு அந்த கண்ணனைப் போல மணவாளன் அமைய வாய்ப்பு உள்ளது. ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்கள் இறைவனாகிய கண்ணனே கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது.

MOST READ: மார்கழி வியாழக்கிழமை - குருவார பூஜை பண்ணுங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்...

திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.

MOST READ: மார்கழி மாதத்தைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

ஒருவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை திருமண தடையை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள நபரையே திருமண தடையை ஏற்படுத்தும். களத்திர தோஷமும், செவ்வாய் தோஷம் போல திருமணம் நடப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும். திருமண தடைகள் நீங்கவும், முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்கவும் ஹோமங்கள் செய்யலாம். மார்கழியில் விரதம் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Magic Of Margazhi: Delay Marriage Remove Aandal Pasuram

The Thiruppavai is a collection of thirty paasurams written in Tamil by Andal also known as Nachiyar, in praise of the Lord kannan.Astrological combinations for Late Marriage Apart from seventh house, some planets play very significant role in delaying the marriage.
Desktop Bottom Promotion