For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...

பீருக்கு அடிமையாகி முடக்குவாதம் ஏற்பட்டு பரிதாபமாக இருக்கும் டாக்டரின் கொடூரக் கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

அளவுக்கு மீறினால் அமிர்தம் விஷமாகும். இது ஒரு பழமொழி. அதாவது எந்த ஒரு செயலும் அளவுக்கு மீறி செயல்பட்டால் அது விஷத்தைப் போல் கொடியதாகிவிடும். அமிர்தமே விஷமாக மாறும்போது விஷம் என்னவாகும்?

Man Suffers From Gout Due To Beer Addiction

நாம் இப்போது காணவிருக்கும் ஒரு வழக்கில் ஒரு நபர் அளவுக்கு அதிகமாக பீர் அருந்தியதால் அவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
29 வயது வாலிபர்

29 வயது வாலிபர்

வூ என்ற வாலிபர் 29 வயது நிரம்பியவர். இவர் சீனாவின் குவாங்க்டாங் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு கால் மூட்டு பகுதியில் சில நாட்களாக தீவிர வலி இருந்து வந்துள்ளது. இவரால் இயல்பாக நடக்க முடியாத அளவுக்கு வலி தீவிர நிலையை எட்டி இருந்தது. இதனால் அவருடைய தூக்கமும் தொலைந்தது.

MOST READ: தங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...

கடும் வலி

கடும் வலி

தொடர்ந்து இரண்டு வாரங்கள் வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பின்னர் மருத்துவமனைக்குச் செல்லத் திட்டமிட்டார். அவரால் தனியாக மருத்துவமனை செல்ல முடியாத அளவிற்கு வலி இருந்ததால் நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கால் மூட்டு பகுதியில் ஒரு அசாதாரண வீக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். எனவே அந்த வீக்கத்தை குறைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

வீக்கம்

வீக்கம்

அந்த வீக்கம் ஏற்பட்ட பகுதியில் துளையிட்டு பார்க்கும்போது, அந்த இடத்தில் இருந்து வெண்மை நிற திரவம் வெளிப்பட்டது. இது மிகவும் அசாதாரணமாக இருந்தது.

பொதுவாக இந்த வித மூட்டு பகுதியில் உண்டான வீக்கத்தில் இருந்து திரவம் வெளியிடப்படும்போது அது வெறும் 3 முதல் 5மிலி அளவு வெளிர் மஞ்சள் நிற திரவம் மட்டுமே வெளிப்படும். இது சிறிது ஒட்டும்தன்மையுடன் இருக்கும். ஆனால் இந்த ழக்கில் வூவின் மூட்டு பகுதியில் இருந்து வெளிப்பட்ட திரவம் பால் போன்ற வெண்மை நிறத்தில் மிகவும் அடர்த்தியாக இருந்தது.

தினம் 10 பீர்

தினம் 10 பீர்

அவரை முழுவதும் பரிசோதித்தபின், வூ ஒரு மிகப்பெரிய பீர் பிரியர் என்பது தெரிய வந்தது. அவருடைய பதின் பருவ காலத்தில் இருந்து தினமும் பீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளில் 10 கேன் பீர் குடிக்கும் அளவிற்கு பீர் மோகம் அவருக்கு இருந்தததை மருத்துவரிடம் வெளிப்படுத்தினார்.

MOST READ: இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...

முடக்குவாதம்

முடக்குவாதம்

வூ தற்போது கடுமையான முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பீர் அவருடைய நிலைமையை மேலும் மோசமாக மாற்றியுள்ளது. யூரிக் அமில கற்கள் மூட்டு பகுதியில் படிவதால் கீல்வாதம் என்னும் முடக்கு வாதம் ஏற்படுகிறது, இதனால் அந்தப் பகுதி மிகவும் வலியுடன் வீக்கத்துடன் காட்சியளிக்கும்.

வூ ஓரளவிற்கு அதிர்ஷ்டம் செய்திருந்ததால், மருத்துவர்கள் அவருடைய பாதிப்பை சரிசெய்ய சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Suffers From Gout Due To Beer Addiction

Anything you do in excess can be dangerous. Here is the case of a man who drank beer in excess was left with gout! Check out the whole case which reveals the danger of drinking beer in excess
Desktop Bottom Promotion