Just In
- 59 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உங்களிடம் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா என்பதை கண்டறியும் எளிய வழிகள் என்ன தெரியுமா?
ஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தனக்கும் வேண்டுமென்று விரும்புவது ஆசை, தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்று விரும்புவது பேராசை அவ்வ்ளவுதான்.
மனிதர்கள் இலைகளை உடுத்தி குகைகளில் வாழ்ந்த காலம் முதல் இன்று செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடும்வரை முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்குள் இருந்த ஆசைதான். எந்தவொரு செயலுக்கு பின்னாலும் ஒருவரின் ஆசை என்பது நிச்சயம் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனை மனிதனாக மாற்றியதே ஆசைதான். ஆனால் மனிதனை மிருகமாக மாற்றுவது பேராசைதான்.
ஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தனக்கும் வேண்டுமென்று விரும்புவது ஆசை, தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்று விரும்புவது பேராசை அவ்வ்ளவுதான். மனிதனுக்குள் இருக்கும் மிருக குணத்தை தூண்டிவிடும் தீக்குச்சிதான் பேராசை. இந்த பதிவில் பேராசை பிடித்தவர்களை கண்டறியும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பேராசை
பேராசைக்கு ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது, அனைவருக்கும் பேராசை இருக்கும். அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களே மனிதர்கள், அதன்போக்கில் செயல்படுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகி விடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இன்று நமது சமூகத்தில் பேராசை பிடித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் பழகுவதற்கு இனிமையனவராக தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடன் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழிகளை தொடர்ந்து பார்க்கலாம்.
இவர்கள் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள்
வேலைகளில் இருந்து இவர்கள் எப்பொழுதும் விலகியே இருப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்கும் போது, இவர்கள் வேலை செய்வதில் இருந்து தப்பிக்க கடினமாக உழைப்பார்கள். மற்றவர்கள் புயல் போல வேலை செய்தாலும் இவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் பொறுமையை கடைபிடிப்பார்கள். ஆனால் வேலை வெற்றிகரமாக முடிந்த பிறகு அதற்கான வெகுமதியை பெறும்போது இவர்கள்தான் அங்கு முதலில் நிற்பார்கள்.
அனைத்தும் எனக்கே
பேராசை பிடித்தவர்கள் எப்பொழுதும் சிக்கனமானவராய் இருப்பார்கள். தன் கையிலிருக்கும் பணத்தை பிறருக்கு தேவைகள் இருந்தாலும், இவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை இருந்தால் கூட அதனை கொடுக்கமாட்டார்கள். உதாரணத்திற்கு சில முதலாளிகள் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் போன்றவற்றை நியாயமாக வழங்குகிறார்கள். பலரும் நஷ்ட கணக்கு காட்டி அவர்களின் பணத்தையும் சுருட்டவே முயலுவார்கள். நண்பர்களிலேயே பணம் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை திருப்பி கொடுக்கும்போது கையில் பணம் இருந்தால் கூட வராது.
என்னை பாதிக்காத வரை உனக்கு ஆதரவு கொடுப்பேன்
பேராசைக்காரர்களுக்கு எப்பொழுதுமே அனைத்து பிரச்சினைகளின் மீதும் வலுவான கருத்துக்கள் இருக்கும் ஆனால் அதனை மற்றவர்கள் மட்டுமே சுமக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது போர் நடக்க வேண்டும் ஆனால் அதில் நாம் கலந்து கொள்ளக்கூடாது, வரி அதிகரிக்கப்பட வேண்டும் ஆனால் தான் அதை கட்டக்கூடாது போன்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எது கிடைத்தாலும் போதும்
பேராசைக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பெறுவதற்கு முதலில் நிற்பார்கள் ஆனால் அந்த வெகுமதியை பெற முயற்சி செய்வதில் எப்பொழுதும் கடைசியாகவே இருப்பார்கள். அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக இவர்கள் எப்பொழுதும் தனக்கு மட்டுமே பெரும்பான்மையான நன்மைகள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அடுத்தவர்களின் உழைப்பாய் இருந்தாலும் தனக்கே அதிகபட்ச பலன்கள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதை பெறவும் செய்வார்கள்.
அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள்
பேராசை நோய் பிடித்தவர்கள் தனக்கு சொந்தமில்லாத பொருளாக இருந்தாலும் அது யாருடைய பொருளாக இருந்தாலும் யோசிக்காமல் எடுத்துக்கொள்வார்கள். இது மற்றவர்களின் உழைப்பய் திருடுவதற்கு சமமாகும். இவர்களிடம் பொருளை இழப்பவர்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டால் அவற்றை நிரந்தரமாகி மறந்துவிட வேண்டியதுதான்.
புத்திசாலிகள்
பேராசைக்கார்கள் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பார்கள் அவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயலாபத்திற்காக விதிமுறை மீறல்களில் ஈடுபடுவார்கள். இவர்களின் செயல்கள் முற்றிலும் சட்டபூர்வமானதாக இருந்தாலும் மற்றவர்கள் தலையில் பொறுப்பை சுமத்துவதன் மூலம் இவர்கள் தப்பித்து கொள்வார்கள்.
மற்றவர்களின் தன்னம்பிக்கையை சுரண்டுவது
சிலர் மற்றவர்களின் சிறப்பை வெளியே கொண்டுவர முயலுவார்கள் ஆனால் பேராசைக்காரர்களோ தங்களை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்களை சிறப்பாக உணர் வைக்க மற்றவர்களின் நம்பிக்கையை சிதைப்பார்கள். இவர்களிடம் உதவிகளை துளியும் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களின் நம்பிக்கையை தகர்ப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.