Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தமிழ் தாயின் செல்லப்பிள்ளை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை!
இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 26
தேசிக விநாயகம்பிள்ளை, குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ் கவிஞர். பக்தி, இலக்கியம், சமூகம், குழந்தை, இயற்கை பற்றிய பாடல்கள் மற்றும் வரலாற்று கவிதைகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், வாழ்த்துப் பாடல்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என தமிழ் கவிதையில் ஒரு பெரிய தளத்தில் எழுத்தாளுமை செலுத்தியவர் தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள்.
இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 26!

Image Credit: madhumathi.com
மரணம்!
1987 - இன்றைய இளைஞர் கூட்டத்தில் பெரும்பாலானோர் பிறந்திருக்கவே மாட்டார்கள். அப்போதே தனியொருவனாக போராடி ஈழ விடுதலைக்கு அச்சாணி அடித்தவர் திலீபன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன். இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீர், உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்து உயிரை கொடுத்து போராசியா தியாகி.
1954 - தமிழ் கவிதையில் ஒரு பெரிய தளத்தில் எழுத்தாளுமை செலுத்தியவர் தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் இறந்த தினம் இன்று.
பிறப்பு!
1913 - திருக்குறள் வீ. முனிசாமி.
1932 - மன்மோகன் சிங், இந்தியாவின் 13வது பிரதமர்.
1966 - பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
வரலாறு!
1580 - உலகை முதன் முதலாக சார் பிரான்சிஸ் டிரேக் சுற்றி வந்தார்.
1934 - ஆர்.எம்.எச். குயின் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1950 - இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.
1960 - முதல் முறையாக அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜான். எப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது
1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
அசம்பாவிதம்!
1954 - ஜப்பானில் ஏற்பட்ட அபாய புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியது, அதில் பயணம் செய்த 1,172 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1983 - அணு ஆயுதம் ஏவப்பட்டது என கணினியின் தவறால் அறிக்கை ஒன்று வெளியானது என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, ஓர் அணு ஆயுத போர் ஏற்படுவதை தடுத்தார்.
1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
2002 - செனகல் நாட்டு கப்பல் காம்பியாவில் (Gambia) மூழ்கியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
போர்!
1918 - முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்திய போராக அமைந்த மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பமானது.
1950 - ஐக்கிய நாடுகளின் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.



Click it and Unblock the Notifications