Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அந்த 75 நாள் மர்மமானது, இந்த 75 நாள் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டது!
27.07.1956 முதல் 10.10.1956 வரை மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை தமிழகம் என மாற்றக் கூறி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிரிழந்தவர்.
காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டதற்காக ஆறுமாத காலம் சிறைவாசமும், கரூரில் நடந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டதற்காக ரூ.ஐந்து அபராதமும் கட்ட தண்டனை பெற்றவர் சங்கரலிங்கனார்.
தேசத்திற்காக உழைக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர். 1944ல் ரூ.150 மாத சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த வேலையை விட்டு, காந்தி ஆசிரமத்தில் செர்ந்டகார். அங்கே இவர்க்கு சம்பளமாக மாதம் ரூ. 30 கொடுக்கப்பட்டது.
27.07.1956 முதல் 10.10.1956 வரை மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை தமிழகம் என மாற்றக் கூறி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிரிழந்தவர்.
இவரது போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவு கூற வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு தியாகி சங்கரளிங்கனர் மணிமண்டபத்தை விருதுநகரில் 18.06.2015 அன்று கட்டி திறந்து வைத்தார்.
பிறப்பு!
இந்திய வீணை இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான சிட்டி பாபு பிறந்த தினம் (1936).
- ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் பிறந்தவர்.
- இவரது இயற் பெயர் ஹனுமானுலு ஆகும்.
- இவர் வீணை இசை கலையை ஈமனி சங்கர சாஸ்திரி எனும் கலைஞரிடம் கற்றுக் கொண்டார்.
- தனது ஐந்து வயதிலேயே, தந்தை செள்ளப்பள்ளி ரங்காராவ் வீணை வாசித்துக் கொண்டிருந்த போது தவறை கண்டுபிடித்து கூறியவர்.
- கலைமாமணி, சங்கீத சூடாமணி மற்றும் சங்கீத அகாடமி விருதுகள் இவர் வென்றுள்ளார்.
- மாரடைப்பால் பிப்ரவரி 9, 1996 அன்று தனது 59வது அகவையில் மரணம் அடைந்தார்.
Image Credit: imcradiodotnet
|
மரணம்!
தமிழ் ஆர்வலர், செயற்பாட்டாளர் மற்றும் போராளி சங்கரலிங்கனார் மறைந்த தினம் (1956 ).
மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த மாகணத்தை தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற போராடியவர் கண்டன் சங்கரலிங்கனார்.
இந்த பெயர் மாற்றம் பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்.
எந்த கட்சியையும் சார்ந்திராத சங்கரலிங்கனார் தனது கோரிக்கையை நிறைவேற்ற கூறி 75 நாட்கள் தனது வீட்டின் முன் அமர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் விருதுநகர் அருகாமையில் உள்ள மண்மலை மேடு எனும் ஊரை சேர்ந்தவர்.
கர்மவீரர் காமராஜர் படித்த பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Credit: tndipr.gov.in
நிகழ்வுகள்!
மனைவியால் விஷம் கொடுத்த கொல்லப்பட்டதை அடுத்து, ரோமப் பேரரசன் குளோடியசுவின் மகன் நீரோ பேரரசாக பொறுப்பேற்ற தினம் (0054)
கொலம்பஸ் தனது குழுவினருடன் இந்தியா என எண்ணி பஹாமாஸ் தீவில் கால் வைத்த தினம் இன்று (1492)
உலகப்புகழ்பெற்ற வாஷிங்க்டன் வெள்ளை மாளிகை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட தினம் (1792)
யாழ்ப்பாணம் மாநகராட்சி மேற்கு, கிழக்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட தினம் (1917)
போர்!
இரண்டாம் உலக போரின் போது, புதியதாக உருவான இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போர் அறிவித்த தினம் (1943 )
லெபனான் மீது சிரியப்படைகள் தாக்குதல் ஆரம்பித்த தினம் (1990)
விபத்துக்கள்!
ஒரே நாளில் மாஸ்கோ மற்றும் உருகுவே நாடுகளை சேர்ந்த விமானங்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் இழப்பு ஏற்ப்பட்ட தினம் (1972 )
பொலிவியாவை சேர்ந்த போயிங் விமானம் சாண்டா க்ரூஸ் நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகி நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் (1976)