Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
ஏன் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது?
நம் முன்னோர்கள் கூறிய சில பயனுள்ள அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்.
நமது முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னணியிலும் ஏதேனும் ஒரு ஆழமான கருத்து புதைந்திருக்கிறது. வடக்கே தலை வைத்து படுக்காதே என கூறுவதை நாம் மூட நம்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால், இதன் பின்னணியில் பெரிய அறிவியல் விளக்கம் இருக்கிறது.
இது போல நமது முன்னோர்கள் நம்மை எதெல்லாம் செய்தல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றுள்ளனர் என இங்கு காணலாம்....

#1
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இது உங்கள் குணாதிசயங்கள் மட்டுமின்றி இல்லற உறவையும் கெடுக்கும்.

#2
பிறர் உடுத்திய உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் போன்றவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. இதனால் ஆரோக்கிய சீர்கேடு நிகழும். நோய் தொற்று எளிதாக பரவும்.

#3
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.

#4
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம். இதை பெரும்பாவம் என சொல்வதன் காரணம் பசு மாடு மூலமாக தான் நமது அன்றாட உணவிற்கு தேவையான பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும், இது நமது விவசாயத்திற்கு பெரிதும் உதவும் விலங்காகும்.

#5
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது.

#6
சாப்பிடும் போது இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற வரிசையில் உணவை உண்ண வேண்டும். இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.

#7
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

#8
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

#9
இருட்டில் சாப்பிடக்கூடாது. மாலை சாப்பிடும் போது சூரியனை வணங்கி விளக்கேற்றிய பிறகே சாப்பிட வேண்டும், இதற்கு காரணம், அந்நாட்களில் இரவு நேரத்தில் உணவில் பூச்சி அல்லது ஏதாவது கலந்துவிடாமல் சாப்பிட இவ்வாறு கூறியுள்ளனர்.

#10
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications