Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
ஏன் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது?
நம் முன்னோர்கள் கூறிய சில பயனுள்ள அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்.
நமது முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னணியிலும் ஏதேனும் ஒரு ஆழமான கருத்து புதைந்திருக்கிறது. வடக்கே தலை வைத்து படுக்காதே என கூறுவதை நாம் மூட நம்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால், இதன் பின்னணியில் பெரிய அறிவியல் விளக்கம் இருக்கிறது.
இது போல நமது முன்னோர்கள் நம்மை எதெல்லாம் செய்தல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றுள்ளனர் என இங்கு காணலாம்....

#1
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இது உங்கள் குணாதிசயங்கள் மட்டுமின்றி இல்லற உறவையும் கெடுக்கும்.

#2
பிறர் உடுத்திய உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் போன்றவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. இதனால் ஆரோக்கிய சீர்கேடு நிகழும். நோய் தொற்று எளிதாக பரவும்.

#3
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.

#4
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம். இதை பெரும்பாவம் என சொல்வதன் காரணம் பசு மாடு மூலமாக தான் நமது அன்றாட உணவிற்கு தேவையான பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும், இது நமது விவசாயத்திற்கு பெரிதும் உதவும் விலங்காகும்.

#5
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது.

#6
சாப்பிடும் போது இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற வரிசையில் உணவை உண்ண வேண்டும். இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.

#7
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

#8
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

#9
இருட்டில் சாப்பிடக்கூடாது. மாலை சாப்பிடும் போது சூரியனை வணங்கி விளக்கேற்றிய பிறகே சாப்பிட வேண்டும், இதற்கு காரணம், அந்நாட்களில் இரவு நேரத்தில் உணவில் பூச்சி அல்லது ஏதாவது கலந்துவிடாமல் சாப்பிட இவ்வாறு கூறியுள்ளனர்.

#10
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications