Latest Updates
-
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஏன் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது?
நம் முன்னோர்கள் கூறிய சில பயனுள்ள அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்.
நமது முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னணியிலும் ஏதேனும் ஒரு ஆழமான கருத்து புதைந்திருக்கிறது. வடக்கே தலை வைத்து படுக்காதே என கூறுவதை நாம் மூட நம்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால், இதன் பின்னணியில் பெரிய அறிவியல் விளக்கம் இருக்கிறது.
இது போல நமது முன்னோர்கள் நம்மை எதெல்லாம் செய்தல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றுள்ளனர் என இங்கு காணலாம்....

#1
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இது உங்கள் குணாதிசயங்கள் மட்டுமின்றி இல்லற உறவையும் கெடுக்கும்.

#2
பிறர் உடுத்திய உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் போன்றவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. இதனால் ஆரோக்கிய சீர்கேடு நிகழும். நோய் தொற்று எளிதாக பரவும்.

#3
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.

#4
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம். இதை பெரும்பாவம் என சொல்வதன் காரணம் பசு மாடு மூலமாக தான் நமது அன்றாட உணவிற்கு தேவையான பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும், இது நமது விவசாயத்திற்கு பெரிதும் உதவும் விலங்காகும்.

#5
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது.

#6
சாப்பிடும் போது இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற வரிசையில் உணவை உண்ண வேண்டும். இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.

#7
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

#8
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

#9
இருட்டில் சாப்பிடக்கூடாது. மாலை சாப்பிடும் போது சூரியனை வணங்கி விளக்கேற்றிய பிறகே சாப்பிட வேண்டும், இதற்கு காரணம், அந்நாட்களில் இரவு நேரத்தில் உணவில் பூச்சி அல்லது ஏதாவது கலந்துவிடாமல் சாப்பிட இவ்வாறு கூறியுள்ளனர்.

#10
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications











