ஏன் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது?

நம் முன்னோர்கள் கூறிய சில பயனுள்ள அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்.

நமது முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னணியிலும் ஏதேனும் ஒரு ஆழமான கருத்து புதைந்திருக்கிறது. வடக்கே தலை வைத்து படுக்காதே என கூறுவதை நாம் மூட நம்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால், இதன் பின்னணியில் பெரிய அறிவியல் விளக்கம் இருக்கிறது.

இது போல நமது முன்னோர்கள் நம்மை எதெல்லாம் செய்தல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றுள்ளனர் என இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இது உங்கள் குணாதிசயங்கள் மட்டுமின்றி இல்லற உறவையும் கெடுக்கும்.

#2

#2

பிறர் உடுத்திய உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் போன்றவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. இதனால் ஆரோக்கிய சீர்கேடு நிகழும். நோய் தொற்று எளிதாக பரவும்.

#3

#3

பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.

#4

#4

பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம். இதை பெரும்பாவம் என சொல்வதன் காரணம் பசு மாடு மூலமாக தான் நமது அன்றாட உணவிற்கு தேவையான பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும், இது நமது விவசாயத்திற்கு பெரிதும் உதவும் விலங்காகும்.

#5

#5

தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது.

#6

#6

சாப்பிடும் போது இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற வரிசையில் உணவை உண்ண வேண்டும். இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.

#7

#7

நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

#8

#8

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

#9

#9

இருட்டில் சாப்பிடக்கூடாது. மாலை சாப்பிடும் போது சூரியனை வணங்கி விளக்கேற்றிய பிறகே சாப்பிட வேண்டும், இதற்கு காரணம், அந்நாட்களில் இரவு நேரத்தில் உணவில் பூச்சி அல்லது ஏதாவது கலந்துவிடாமல் சாப்பிட இவ்வாறு கூறியுள்ளனர்.

#10

#10

வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion