Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
பிணத்துடன் குடித்தனம் நடத்தும் வினோத மக்கள் - மர்மமான தீவு!
இங்கு இறந்தவர்களுடன் வாரக்கணக்கில் வாழும் வினோதமான இந்தோனேசியா ஐதீகம் பற்றி கூறப்பட்டுள்ளது.
வினோதங்களுக்கு குறைவில்லாத நமது உலகில், சில வினோதங்கள் அதிசயிக்க வைக்கும், சில வினோதங்கள் அதிர்ச்சி அடைய வைக்கும். இது அதிர்ச்சி அடைய செய்யும் வினோதம்.

இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இன மக்கள் இறந்தவர்களின் பிணத்துடன் வாரக்கணக்கில் வாழும் ஐதீகம் கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்...
சுலவேசி தீவு!
இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் மத்தியில் தான் இந்த வினோத ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இறப்பு அல்ல!
இவர்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர். எருமை உயிர் பலி தரும் வரையில் இவர்கள் ஒருவருடைய மரணத்தை மரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
வாரக்கணக்கில்....
வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என இறந்தவர்களின் உடலை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவர்களுக்கு உணவூட்டி, உடை மாற்றிவிட்டு, அவர்கள் மீது ஒரு உயிருள்ள நபர் மீது அக்கறை செலுத்துவது போல வாழ்கின்றனர்.
தோண்டி எடுப்பது...
ஒரு சில டோராஜன் இன மக்கள் வருடாவருடம் புதைத்த தங்கள் உறவினரின் உடலை தோண்டி எடுத்து, புது ஆடைகள் உடுத்தி, உணவூட்டி தங்களுடன் வைத்துக் கொண்டு மீண்டும் புதைத்து விடுகின்றனர். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
சுத்தப்படுத்துதல்!
சில வருடங்களுக்கு ஒருமுறை உடலை தோண்டி எடுக்கும் இந்த நாட்களில் இவர்கள் டோராஜன் மக்கள் உடலை சுத்தம் செய்தும் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications