Latest Updates
-
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நீங்க எவ்வளவு நாள் உயிரோட இருப்பீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...
இங்கு நெற்றிக் கோடுகள் ஒருவரது வாழ்நாள் குறித்து என்ன சொல்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவரது தலைவிதியை பல விஷயங்கள் தீர்மானிக்கும். அதில் கைரேகை, நெற்றியில் உள்ள கோடுகள் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது தலைவிதி மற்றும் வாழ்நாளைக் கணிக்க முடியும். இக்கட்டுரையில் நெற்றில் உள்ள கோடுகள் ஒருவரைப் பற்றியும், எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்பது குறித்தும் என்ன சொல்கிறது என பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொருவருக்கும் நெற்றிக் கோடுகள் வேறுபடும். சரி, இப்போது நெற்றிக் கோடுகள் ஒருவரது வாழ்நாள் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம்.

60-65 வரையிலான வாழ்நாள்
வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் 2 கோடுகள் நன்கு அடர்த்தியாகவும், ஆழமாகவும் இருந்தால், அவர்கள் 60-65 வயது வரை வாழ்வார்களாம். மேலும் இம்மாதிரியான நெற்றிக் கோடுகள் பணக்கார ஆளுமையைக் குறிக்கும். இம்மனிதர்கள் பெயருடனும், புகழுடனும், செல்வ வளத்துடனும் இருப்பார்க்ள. ஒருவேளை இந்த கோடுகள் வளைந்தோ அல்லது துண்டு துண்டாகவோ இருந்தால், அவர்கள் வாழ்வில் நிறைய போராட்டங்களை சந்திப்பார்கள்.

75 வயதிற்கு மேலான வாழ்நாள்
வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் நன்கு புலப்படும் படி அடர்த்தியான 3 கோடுகள் இருந்தால், அத்தகையவர்கள் 75 வயதிற்கு மேல் வாழ்வார்களாம். அதே சமயம் இம்மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

குறுகிய நெற்றி
குறுகிய நெற்றியுடன், குழிவிழுந்தவாறு 4 லேசான கோடுகள் இருந்தால், அத்தகையவர்கள் 75 வயது வரை வாழ்வார்களாம்.

100 வயது
வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் 5 கோடுகளுடன் சில துண்டு கோடுகள் இருந்தால், அவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்வை வாழ்வார்கள். இம்மாதிரியான மனிதர்கள் 100 வயது வரை வாழக் கூடியவர்களும் கூட.

கீழ் நெற்றியில் 5 கோடுகள்
ஒருவருக்கு கீழ் நெற்றியில் 5 கோடுகள் இருந்தால், அதுவும் பல துண்டுகளுடன் இருந்தால், அது நல்ல அறிகுறி அல்ல. அத்தகையவர்கள் குறைந்த வாழ்நாளைக் கொண்டவர்களாக நம்பப்படுகிறார்கள்.

கண்ணுக்கு புலப்படாத கோடுகள்
நெற்றியில் கோடுகள் கண்களுக்கே புலப்படாதவாறு இருந்தால், அத்தகையவர்கள் 45-50 வயது வரை வாழ்வார்கள் மற்றும் இத்தகையவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஒன்றை ஒன்று தொட்டவாறான கோடுகள்
நெற்றியில் உள்ள கோடுகளுள் குறைந்தது 2 கோடுகள் ஒன்றை ஒன்று தொட்டவாறு இருந்தால், அத்தகையவர்கள் 60 வயது வரை வாழ்வார்கள். ஆனால் அவர்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது; அதிக மருத்துவ செலவுகளை சந்திப்பார்கள்.



Click it and Unblock the Notifications











