Latest Updates
-
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க!
சூது விளையாடிய போது பாண்டவர்களுக்கு கண்ணன் உதவாதது ஏன்?
மகாபாரதத்தில் கண்ணன் தர்மம் நிலைக்க, அதர்மம் அழிய வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாண்டவர்களுக்கு துணை நின்றவன். கண்ணன் நினைத்திருந்தால் சூதை தடுத்து அல்லது சூதின் போது பாண்டவர்களுக்கு உதவி அவர்கள் சூதில் சகுனியின் சூழ்ச்சிக்கு முன் தோற்காமல் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் கண்ணன் அவ்வாறு செய்யவில்லை?
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!
இந்த கேள்வி பலருக்கும் மகாபாரதம் படிக்கும் போதும், காணும் போதும் எழலாம். ஆம், இவ்வாறு சூதின் போதே பாண்டவர்களுக்கு கண்ணன் உதவியிருந்தால் மகாபாரதத்தின் குருஷேத்திர போர் நடந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது கர்ணனும் கூட உயிரோடு இருந்திருப்பான். ஏன் அனைவரும் கூட ஒருவேளை ஒன்று சேர்ந்திருக்கலாம் அல்லவா?
ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!
நமது கர்மாவுக்கு ஏற்ப தான் நமது செயல்பாடுகளும், விளைவுகளும் இருக்கும் அதுதான் மகாபாரதத்திலும் நடந்தது. அந்த காரணத்தினால் தான் கண்ணன் பாண்டவர்களுக்கு சூதின் போது உதவவில்லை....

வனவாசத்தில் பாண்டவர்கள்
பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் வாழ்ந்து வந்தனர். ஓர் நாள் ஓய்வாக அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணனை பற்றிய பேச்சு எழுந்தது. கண்ணன் கருணைக் கடல், எளியவருக்கு உதவும் மனமுடையவன். தீமை எங்கு நடந்தாலும் அவன் பொறுத்திருக்க மாட்டான். என அனைவரும் மகிழ்ந்து பேசி வந்தனர்.

பீமனின் கேள்விகள்
அப்போது தான் கண்ணனை பற்றி சில கேள்விகளை பீமன் எழுப்பினான். கண்ணன் கருணை கடல் தான், தீனரட்சகன் தான் ஏழ்மையில் அனைவருக்கும் உதபுவன். ஆனால் சிலருக்கு மட்டுமே உதவுகிறான் அது ஏன்? நமக்கு சூதில் உதவாத கண்ணன், பாஞ்சாலிக்கு மட்டும் உதவியது ஏன்? என்று தனது கேள்விகளை எழுப்பினான்.

சகாதேவன் பதில்
பாண்டவர்களில் சகாதேவனே கண்ணனை முற்றிலும் அறிந்தவன் ஆவான். சகுனி சூதுக்கு அழைத்த போது நாம் கண்ணனின் உதவியை நாடவில்லை. அழைத்தால் நமக்கு இழுக்கு ஏற்படுமோ என்று அஞ்சினோம். போரில் வீரமுடைய நமக்கு சூதில் வீரம் இல்லையோ என்று உலகம் பழிக்கும் என்ற அச்சம் நம்முள் இருந்தது என்று சகாதேவன் கூறினான்.

வறட்டு கௌரவும்
நாம் அவ்வாறு கருதாமல், வறட்டு கெளரவம் இன்றி கண்ணனின் உதவியை முதலே நாடியிருந்தால் நாம் சூதில் தோற்றிருக்க மாட்டோம் என்று பீமன் எழுப்பிய கேள்விக்கு தனது பதிலை கூறினான் சகாதேவன்.

பாஞ்சாலிக்கு உதவி
பாஞ்சாலி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுப் போதும், தனது மானம் பறிபோய் கொண்டிருந்த நிலையிலும் கூட கைகளை மேலே உயர்த்தி, கண்ணா, கண்ணா என்று வணங்கி அவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தால். அதன் பயனாகவே கண்ணன் பாஞ்சாலிக்கு உதவினான். கண்ணன் தன்னை நம்புவோரை எப்போதும் கைவிடுவதில்லை என்று மேலும் சகாதேவன் கூறினான்.

நாம் செய்த தவறு
நாம் மான உணர்வினால் செய்த தவறின் பயனாக தான் வனவாசம் வந்துள்ளோம். அவரவர் கர்மா என்பது எவராலும் மாற்றியமைக்க முடியாதது என்று சகாதேவன் தனது பதிலை முடித்த போது, அனைவரும் ஒருமனதாக அந்த கருத்தை வரவேற்றனர்.



Click it and Unblock the Notifications











