Just In
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்டர்போல் வலைவீசித் தேடும் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகள்!!!
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும், நல்ல குணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள், அமெரிக்காவில் இருந்து நமது இந்தியா வரையிலும் கூட தீய எண்ணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். ஏதோ சில காரணத்தினால் தீவிரவாதிகளின் குடியிருப்பு போல இஸ்லாமிய நாடுகள் சித்தரிக்கப்பட்டுவிட்டன.
உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!
தீவிரவாதிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறாகள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதில், குற்றம் செய்த வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களை வழிநடத்துவது மற்றும் ஓர் அங்கமாய் இருப்பது போன்ற காரணங்களினால் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் நபர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்....
"நிழல் உலக தாதா" தாவூத் இப்ராஹிமின் மறுப்பக்கம் - திடுக்கிடும் தகவல்கள்!!!
அய்மன் அல்-ஜவாஹிரி
அய்மன் அல்-ஜவாஹிரி, எகிப்து இஸ்லாமிக் ஜிஹாத்தின் தலைவர். இவர் அல்-கொய்தா அமைப்புடன் இணைந்திருப்பவர். முன்பு, பின்லேடனுக்கு துணையாக இருந்ததாக கூறுகிறார்கள். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தகர்த்தல் தாக்குதலில் இவருக்கும் முக்கிய பங்குண்டு.
ஒமித் தாஹ்விளி (Omid Tahvili)
ஒமித் தாஹ்விளி , பெர்ஷியன் குற்ற பிரிவினரின் தலைவர். இவர் கனடாவில் இருக்கிறார். இந்த குழுவினர் உலகளாவிய இயக்கங்களுடன் இணைப்பில் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு கனடா சிறையில் இருந்து தப்பித்துவிட்டார். அமெரிக்காவின் பண மோசடி வழக்குகளில் இவருக்கு பெரும் பங்கிருக்கிறது.
ஃபேலிசியன் கபுகா (Felicien Kabuga)
ஃபேலிசியன் கபுகா, தீவிரவாத இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளி ஆவர். இப்போது கென்யாவில் பதுங்கியிருப்பதாக கூறுகிறார்கள். நூறு நாட்கள் இவரது குழுவினர் செய்த தீவிரவாத செயலில் எட்டு லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜேம்ஸ் பல்கர்
ஜேம்ஸ் பல்கர் (எ) ஒய்ட்டீ, பாஸ்டன் குற்ற அமைப்பை சேர்ந்தவர். போதை கடத்தல் மற்றும் கொலை குற்ற வழக்குகளில் தேடப்படுபவர். இதுவரை 19 கொலை குற்றத்திற்கு மேல் செய்துள்ளார். மற்றும் எண்ணற்ற பண மோசடி, கொள்ளை வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. கடந்த முப்பது வருடங்களாக போலீசாரிடம் இருந்து தப்பித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 18 மில்லியன் பவுண்ட்ஸ்.
அலீம்ஸான் (Alimzhan Tokhtajhounov)
அலீம்ஸான், ரஷ்ய குற்றவாளி. பல குற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த காரணத்திற்காக இவரை போலிஸ் தேடி வருகிறது. சட்ட விரோதமாக வெடிப்பொருள் விற்பது, போதை பொருள் கடத்தல் / விற்பது, வாகனங்களை திருடி விற்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஜோசப் கோனி
ஜோசப் கோனி, உகாண்டாவை சேர்ந்த ஒரு கொரில்லா படை தலைவர். எதிர்ப்பு இராணுவத்தை நடத்தி வருகிறார். மனிதர்களுக்கு எதிராக பல நாச வேலைகளில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. போர் குற்றங்களும் இவர் மீது இருக்கின்றன.
செம்யோன் (Semion Mogilevich
உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக கருதப்படுபவர் செம்யோன். உலகெங்கிலும் பரவியிருக்கும் ரஷ்யாவின் பெரும்பாலான மாஃபியாக்களின் தலைவன் இவர் என தெரியவருகிறது.
தாவூத் இப்ராஹிம்
இந்தியவில் இருக்கும் குற்ற பிரிவு குழுக்களின் தலைவனாக திகழ்பவர். டி-கம்பெனி இவருடையது என கூறப்படுகிறது. குற்றக் காரியங்களில் ஈடுபடவே ஓர் குழுவை நடத்தி வருகிறார். கொலை, கடத்தல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் போதை விற்பனை செய்து வருகிறார். அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாய் நிறைய தகவல்கள் கூறுகின்றன. இன்டர்போல் தேடும் உலகின் பயங்கர குற்றவாளிகளில் இவரும் ஒருவர்.
மேட்டியோ மெச்சினா டினாரோ (Matteo Messina Denaro)
மேட்டியோ, இத்தாலியின் கோசா நோச்டிரா எனும் மாஃபியா கும்பலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். இவரை பற்றிய காமிக் புத்தகம் இத்தாலியில் பிரபலம் என கூறப்படுகிறது. கடந்த இருபது வருடங்களாக, குற்ற செயல்களில் ஈடுபடுவதாய் தகவல்கள் தெரியவருகிறது.
ஜொக்கன் குஸ்மென் (Joaquín Guzmán)
உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக கருதப்படுபவர் ஜொக்கன் குஸ்மென். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தும் கூட்டத்தின் தலைவன். கடத்துவது, குறிவைத்துக் கொலை செய்வது, பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களில் தேடப்பட்டு வருகிறார்.மெக்ஸிகோவில் கடந்த 2003ஆம் ஆண்டு டாப் போதை பொருள் கடத்தல்காரராக இருந்தார். எண்ணற்ற கொலை வழக்குகள் இவர் மீது இருக்கிறது.