For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடனும்னா ஏன் ஹனுமனை வழிபடனும்னு தெரியுமா?

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட ஹனுமனை எவ்வாறு வழிபடவேண்டும். அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளையும் இங்கெ விவரிக்கப்பட்டுள்ளது.

By Bala Latha
|

நவ கிரஹங்களிலேயே சனி மிகவும் சக்தி வாய்ந்த கோளாகும். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி, மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவுக்கும் தாக்கங்களை சில முறை ஏற்படுத்தும் காலங்களாகும்.

சனியின் தாக்கங்கள் எப்பொழுதும் தொந்தரவுகளையும், மோசமான விளைவுகளையுமே ஏற்படுத்தும் என்று சொல்வது தவறான கருத்தாகும். அது நமது பிறந்த ஜாதக கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொருத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும் வெகுமதிகளையும் பெற்றுத் தரும்.

ஒரு மனிதனின் பிறந்த ஜாதக கட்டத்தில் சனியின் மோசமான தாக்கங்கள் இருந்தால், அவர் இறைவன் ஹனுமானை வணங்க வேண்டியது அவசியம் என்று பொதுவாக அறியப்படுகிறது. இறைவன் ஹனுமான் 'சங்கட மோச்சன்' என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். சங்கடம் என்பதன் மொழியாக்கம், தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Worshipping Hanuman Prevents The Effects Of Shani,

Why Worshipping Hanuman Prevents The Effects Of Shani
Story first published: Monday, May 22, 2017, 14:26 [IST]
Desktop Bottom Promotion