Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இரத்தம் ஒழுக நிர்வாணமாக மக்கள் மத்தியில் இவர்கள் நடத்திய போராட்டம் எதற்கு?
இறைச்சி தயாரிப்பு மற்றும் உட்கொள்ளுதல் எதிர்த்து விலங்குகள் நல ஆதரவாளர்கள் நடத்திய வினோதமான போராட்டம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நமது உலகம் மனிதர்களுக்கு மட்டும் ஆனதல்ல. இதை நாம் மட்டும் தான் மனதில் வைத்துக் கொள்வதில்லை. மற்ற எந்த உயிரினமும் உலகை அழிக்கவோ, மற்ற உயிர் இனத்தை முற்றிலுமாக அழிக்கவோ முற்படுவதில்லை.
ஆனால், மனிதர்களாகிய நாம் தான் நமது தேவைக்காக, பேராசைக்காக, சுயநலத்திற்காக உலகின் மற்ற உயிர் இனங்கள் மற்றும் இயற்கை செல்வங்களை அழித்து வருகிறோம். முக்கியமாக காடுகளை அடுத்து, நமது அன்றாட தேவைக்காக, பசிக்காக, ஃபேஷன் உடைகள், உபகரணங்களுக்காக அதிகளவில் விலங்குகளை கொன்றுகுவித்து வருகிறோம்.

உலகின் வாழ்வியல் வட்டத்தை நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். பச்சை தாவரங்களை உண்ணும் விலங்குகள், அவ்விலங்குகளை உண்ணும் காட்டு விலங்குகள், காட்டு விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள் என அது அமைந்திருக்கும்.
இதில் ஏதேனும் ஒன்று அழிந்தாலும் கூட, மற்ற இனங்களும் முற்றிலும் அழியும் அபாயம் இருக்கிறது. இதையெல்லாம் மறந்து நாம் விலங்குகளை மனசாட்சி இன்றி அழித்து வருகிறோம்...

விலகுகள் நல ஆதரவாளார்கள்!
உலகில் உள்ள பல விலங்குகள் நல ஆதரவாளர்கள் விலங்குகளை மனிதர்களின் சுயநல பயன்பாட்டிற்கு, உணவாக, தொழிற்சாலை தயாரிப்புகளுக்காக கொல்லப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் ஒருபடி மேல்..
இதர உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் பலவகையிலான போராட்டங்கள் ஆங்காங்கே இது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

மனித இறைச்சி!
அதில் ஒரு படி மேலாக சென்று, விலங்குகளை எப்படி இறைச்சியாக நாம் விற்கிறோமோ அவ்வாறே, மனிதர்கள் இரத்தம் சொட்ட, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு மனிதர்கள் கூடும் கூட்டம் மிகுதியான இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Image Source

நூறு கோடி!
இறைச்சிக்காக மட்டுமே, உலகில் வருடா வருடம் நூறு கோடி அளவில் விலங்குகள் கொன்று குவிக்கப்படுகின்றன. இது மனித இனத்தில் நூறு கோடி பேர் கொன்று குவிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதை நாம் அறிவோம்.

அனைவரும் உயிரினங்கள் தானே!
ஆடை அணிதிருப்பதால் நாம் நாகரீகம் அறிந்த, மேல்தட்டு உயிரினங்கள் ஆகிவிட்டோம். ஆடை அணியாமல் காடுகளில், தெருக்களில் நமது கல்வீச்சிக்கு, துப்பாக்கி சூட்டுக்கு அஞ்சி வாழ்வதால் இதர உலக உயிரினங்கள் கீழ்தட்டு உயிரினங்கள் ஆகிவிட்டன.

உரிமை மீறல்...
இதனால், நாம் விலங்குகளை கொன்று குவித்தால் தவறில்லை. இதுவே, அண்டைநாடுகளில் மனிதர்களை, மனிதர்களே கொண்டு குவித்தால் அது மனித உரிமை மீறல். அனைவரும் உயிர் தானே. இதிலும், ஏற்ற தாழ்வு உண்டா?



Click it and Unblock the Notifications











