Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா?
சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பானி பூரிக்கு அடுத்தபடியாக இன்று பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருளாக ஷவர்மா உள்ளது. மக்கள் ஷவர்மாவை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் ஆங்காங்கு ஷவர்மா கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஃபுட் பாய்சனிங் சம்பவத்திற்கு காரணம் ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் என்று கேரள சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அறிக்கைகளின் படி, கடந்த வாரம் காசர்கோடில் உள்ள சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தை சோதனை செய்ததில் ஷிகெல்லா பாக்டிரியா இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த உணவகத்தின் உரிமையாளரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
இப்போது ஒரு மாணவியின் உயிரைப் பறித்து, 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு காரணமான ஷிகெல்லா என்னும் பாக்டீரியாக மிகவும் ஆபத்தானதா, இத்தொற்று உயிரைப் பறிக்கக்கூடியதா மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.

ஷிகெல்லா என்றால் என்ன?
ஷிகெல்லா என்பது உலகளவில் வயிற்றைப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களில் ஒன்றாகும். இது என்ட்ரோபாக்டர் என்ற பாக்டீரியா குடும்பத்தால் ஏற்படும் குடல் தொற்று ஆகும். ஆனால் என்ட்ரோபாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் மனிதர்களுக்கு நோய்களை உண்டாக்குவதில்லை. ஷிகெல்லா முக்கியமாக குடலை பாதித்து, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.

ஷிகெல்லா எப்படியெல்லாம் பரவலாம்?
இந்த நோய்த்தொற்று எளிதில் பரவக்கூடியது. சிறு அளவிலான பாக்டீரியாக உடலினுள் சென்றாலும், அது நோயுறச் செய்துவிடும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. இந்த தொற்று நோயாளியின் மலத்துடன நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டால், எளிதில் பரவும். மேலும் இந்த ஷிகெல்லா தொற்று அசுத்தமான நீரில் நீந்தினால் அல்லது குளித்தால் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஷிகெல்லா தொற்று எவ்வளவு பொதுவானது?
அறிக்கையின் படி, ஷிகெல்லா தொற்றுகள் மிகவும் பொதுவானவை அல்ல. வேண்டுமானால் ஒரு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு ஏற்படும் 100-ல் ஒருவருக்கு ஷிகெல்லோசிஸ் இருக்கலாம் என்று அப்பல்லோ மருத்துமனையின் மூத்த ஆலோசகர் கூறுகிறார்.
மேலும் ஷிகெல்லோசிஸ் கர்ப்பிணிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு பொதுவாகவும், கடுமையாகவும் ஏற்படலாம். மனிதர்களைப் பாதிக்கும் ஷிகெல்லா பாக்டீரியாவில் 4 வகைகள் உள்ளன. அவை ஷிகெல்லா சோனி, ஷிகெல்லா ஃப்ளெக்ஸ்னெரி, ஷிகெல்லா பாய்டி மற்றும் ஷிகெல்லா டிசென்டீரியா. இதில் நான்காவது வகை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது அதிக நச்சை உற்பத்தி செய்கிறது.

எப்போது மருத்துவரை காண வேண்டும்?
ஒருவர் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது ஒரு நாளில் 20 முறைக்கும் மேல் கழிவறை சென்றால், அவர் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். அதுவே ஒரு நோயாளி லேசான அறிகுறிகளை கொண்டிருந்தால், 3-4 நாட்கள் வரை காத்திருந்து பின் மருத்துவரை சந்திக்கலாம். ஒருவேளை பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சலானது 101 டிகிரி F (38 டிகிரி C) அல்லது அதற்கு மேல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஷிகெல்லா தொற்றினால் இறப்பு ஏற்படுவது பொதுவானதா?
பொதுவாக ஷிகெல்லா தொற்றினால் மரணம் ஏற்படாது. ஆனால் நோயாளி மிகவும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருந்தால், இது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்டீரியாக்கள் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த தொற்று உயிருக்கு ஆபத்தானதாகவும் மாறும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
எப்போதும் உணவு மற்றும் நீர் முலம் பரவும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் தவறாமல் எடுக்க வேண்டும். அதற்கு உண்பதற்கு முன்னும், பின்னும் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். குடிக்கும் நீர் சுத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நற்பதமாக உள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும். சிக்கன், பால், மீன் போன்ற உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகும் தன்மை கொண்டுள்ளதால், இந்த பொருட்கள் சரியான வெப்பநிலையில் வைத்து பாதுகாப்பதோடு, நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications











