Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா?
நாவல் கொரோனா வைரஸ் உங்கள் நுரையீரலைத் தாக்கி சளியை அடர்த்தியாக்குகிறது, இது சுவாசிக்க மிகவும் கடினமானதாக மாற்றும்.
உலகம் முழுவதும் சுமார் 24 ஆயிரத்திற்கும் அதிகமான பேரை காவு வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். உலகை அச்சுறுத்தி வைரஸால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகில் பல நாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று சாதாரண காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது மிகவும் கடுமையானதாகிவிடும். நாவல் கொரோனா வைரஸ் உங்கள் நுரையீரலைத் தாக்கி சளியை அடர்த்தியாக்குகிறது, இது சுவாசிக்க மிகவும் கடினமானதாக மாற்றும்.

இந்த உண்மை ஒவ்வொருவரும் தங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வைக்கிறது. கொடிய வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் வழிகளைத் தேடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியமான நுரையீரல் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பு பொறிமுறையாகும். ஆகையால், உங்களுக்கு சளி ஏற்பட்டால், அதிலிருந்து எப்படி வெளியேறலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

உடலுக்கு சளி ஏன் தேவை?
நமது உடலுக்கு சளி தேவை. ஏனெனில் அது ஒரு பாதுகாப்பு நெறிமுறையாக செயல்படுகிறது. நாம் சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கித் தவிக்கிறது. இது நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளி பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் உடலால் அகற்றப்படுகிறது.

நுரையீரல் பாதுகாப்பு
உங்கள் நுரையீரலில் அதிகப்படியான சளி கட்டப்பட்டிருக்கும் போது பிரச்சினை எழுகிறது. சிஓபிடி (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்), ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு நுரையீரலில் அதிக சளி இருக்குபோது ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தவிர கிருமிகளை எதிர்த்துப் போராட நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நம் உடலுக்கு சளி உதவுகிறது.

வெந்தயம்
ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை எடுத்து 4-5 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி சூடாக குடிக்கவும். நீங்கள் ஒரு நாளில் ஒன்று-இரண்டு கப் சாப்பிடலாம். இது சளியை உடைக்கிறது. பின்னர், இது உங்கள் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. சளி உங்கள் உடலை கிருமிகள், நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது வைரஸுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாற்றுகிறது. உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி சளியை உடைப்பது.

பிராணயாமா மற்றும் உடற்பயிற்சி
ஆழ்ந்த சுவாசம் சளியை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அதே வழியில் நமக்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, கனமாக சுவாசிக்க வைக்கிறது. நாம் கனமாக சுவாசிக்கும்போது, சளி உடைகிறது.

உப்பு நீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். இப்போது அதை மந்தமாக குளிர்விக்கட்டும். பின்னர் அதை அருந்தவும். இந்த எளிதான தீர்வு சளியை உடைக்க உதவுகிறது.

நீராவி
உங்களிடம் வீட்டில் ஒரு ஸ்டீமர் இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள் அல்லது ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உங்கள் தலையை ஒரு துண்டுடன் மூடி, அதிலிருந்து நீராவி எடுக்கலாம். தண்ணீரிலிருந்து வரும் சூடான காற்று கூடுதல் சளியை வெளியேற்ற உதவுகிறது, இதனால் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

அத்தியாவசிய எண்ணெய்கள்
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக அத்தியாவசிய எண்ணெய்கள் போராடுகின்றன. அத்தியாவசிய எண்ணெய்களில் அவை எடுக்கப்பட்ட தாவரங்களிலிருந்து வரும் தனித்துவமான நன்மைகள் நிறைய உள்ளன. இதன் காரணமாக, பண்டைய காலங்களிலிருந்து மருத்துவ மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சளியை போக்க அத்தியாவசிய எண்ணெய்கள் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications











