Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா?
நாவல் கொரோனா வைரஸ் உங்கள் நுரையீரலைத் தாக்கி சளியை அடர்த்தியாக்குகிறது, இது சுவாசிக்க மிகவும் கடினமானதாக மாற்றும்.
உலகம் முழுவதும் சுமார் 24 ஆயிரத்திற்கும் அதிகமான பேரை காவு வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். உலகை அச்சுறுத்தி வைரஸால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகில் பல நாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று சாதாரண காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது மிகவும் கடுமையானதாகிவிடும். நாவல் கொரோனா வைரஸ் உங்கள் நுரையீரலைத் தாக்கி சளியை அடர்த்தியாக்குகிறது, இது சுவாசிக்க மிகவும் கடினமானதாக மாற்றும்.

இந்த உண்மை ஒவ்வொருவரும் தங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வைக்கிறது. கொடிய வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் வழிகளைத் தேடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியமான நுரையீரல் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பு பொறிமுறையாகும். ஆகையால், உங்களுக்கு சளி ஏற்பட்டால், அதிலிருந்து எப்படி வெளியேறலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

உடலுக்கு சளி ஏன் தேவை?
நமது உடலுக்கு சளி தேவை. ஏனெனில் அது ஒரு பாதுகாப்பு நெறிமுறையாக செயல்படுகிறது. நாம் சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கித் தவிக்கிறது. இது நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளி பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் உடலால் அகற்றப்படுகிறது.

நுரையீரல் பாதுகாப்பு
உங்கள் நுரையீரலில் அதிகப்படியான சளி கட்டப்பட்டிருக்கும் போது பிரச்சினை எழுகிறது. சிஓபிடி (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்), ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு நுரையீரலில் அதிக சளி இருக்குபோது ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தவிர கிருமிகளை எதிர்த்துப் போராட நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நம் உடலுக்கு சளி உதவுகிறது.

வெந்தயம்
ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை எடுத்து 4-5 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி சூடாக குடிக்கவும். நீங்கள் ஒரு நாளில் ஒன்று-இரண்டு கப் சாப்பிடலாம். இது சளியை உடைக்கிறது. பின்னர், இது உங்கள் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. சளி உங்கள் உடலை கிருமிகள், நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது வைரஸுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாற்றுகிறது. உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி சளியை உடைப்பது.

பிராணயாமா மற்றும் உடற்பயிற்சி
ஆழ்ந்த சுவாசம் சளியை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அதே வழியில் நமக்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, கனமாக சுவாசிக்க வைக்கிறது. நாம் கனமாக சுவாசிக்கும்போது, சளி உடைகிறது.

உப்பு நீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். இப்போது அதை மந்தமாக குளிர்விக்கட்டும். பின்னர் அதை அருந்தவும். இந்த எளிதான தீர்வு சளியை உடைக்க உதவுகிறது.

நீராவி
உங்களிடம் வீட்டில் ஒரு ஸ்டீமர் இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள் அல்லது ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உங்கள் தலையை ஒரு துண்டுடன் மூடி, அதிலிருந்து நீராவி எடுக்கலாம். தண்ணீரிலிருந்து வரும் சூடான காற்று கூடுதல் சளியை வெளியேற்ற உதவுகிறது, இதனால் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

அத்தியாவசிய எண்ணெய்கள்
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக அத்தியாவசிய எண்ணெய்கள் போராடுகின்றன. அத்தியாவசிய எண்ணெய்களில் அவை எடுக்கப்பட்ட தாவரங்களிலிருந்து வரும் தனித்துவமான நன்மைகள் நிறைய உள்ளன. இதன் காரணமாக, பண்டைய காலங்களிலிருந்து மருத்துவ மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சளியை போக்க அத்தியாவசிய எண்ணெய்கள் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications