Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் நாஸ்ட்ராடமஸ் எப்போதும் முதலிடத்தில் இருப்பார். ஏனெனில் உலகை மாற்றிய பல முக்கிய நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. தற்போது பலரும் எதிர்காலத்தை கணிப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது நாஸ்டராடம்ஸ்தான்.

தற்போது வாழும் நாஸ்ட்ராடமஸ் என்று அழைக்கப்படும் அதோஸ் சலோமே, இந்த ஆண்டிற்கான தனது முக்கிய தீர்க்கதரிசனங்களில் இரண்டு ஏற்கனவே உண்மையாகிவிட்டதாகக் கூறுகிறார். 39 வயதான இந்த பிரேசிலிய தீர்க்கதரிசி, தற்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக 'நியூயார்க் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பரவல் மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவு போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்பட்டு பிரபலமடைந்த சலோமே, சமீபத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் பலித்துள்ள சலோமேவின் கணிப்புகள்
அணுசக்தி மேம்பாடு தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மத்திய கிழக்குப் பகுதியில் போர் மூண்டது தான் கூறிய கணிப்புகளில் முதலில் நிறைவேறியது என்று தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொள்பவர் கூறினார். அதேவேளையில், 2026 கால்பந்து உலகக் கோப்பை குறித்த அவரது இரண்டாவது தீர்க்கதரிசனமும் உண்மையாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். சாம்பியன் அணி "நெருப்பின் நிறங்களை" அணியும் என்று அவர் முன்பே கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஸ்பெயின் வெற்றி பெறும் என்றும் அவர் கணித்திருந்தார்.
கால்பந்து உலகக்கோப்பைப் பற்றுய அவரது கணிப்புப் பற்றி அவர் கூறுகையில், " உலகெங்கிலும் உள்ள பல ஜோதிடர்களும், வர்ணனையாளர்களும் போர்ச்சுகல் அல்லது பிற நாடுகள் கோப்பையை வெல்லும் என்று கணித்துக் கொண்டிருந்த வேளையில், நான் இறுதிப் போட்டியாளர்களை அடையாளம் கண்டு, ஸ்பெயின்தான் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ள நாடு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்," என்று அவர் கூறியுள்ளார்.
சலோமேயின் அடுத்த தீர்க்கதரிசனம் என்ன?
ஆர்க்டிக் வட்டாரத்தில் ரஷ்யாவிற்கும், நேட்டோ (NATO) அமைப்பிற்கும் இடையே ஏற்படக்கூடிய ஒரு பெரும் மோதலே சலோமின் மூன்றாவது கணிப்பு என்று கூறப்படுகிறது. வேகமாக உருகும் துருவப் பனிப்பகுதிகள், அங்குள்ள குறிப்பிடத்தக்க எரிசக்தி வளங்களையும் முக்கியமான கடல் வழித்தடங்களையும் வெளிப்படுத்தும் எனவும், இதனால் உறைந்த வடக்குப் பகுதி ஒரு ஆபத்தான புவிசார் அரசியல் மண்டலமாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இச்சூழ்நிலை தீவிரமடைந்து நேரடி உலகளாவிய மோதலாக மாறக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
ரஷ்யாவின் நகர்வுகள்
"சமீபத்திய கண்காணிப்புத் தகவல்கள், ரஷ்யா தனது ஏவுகணை அமைப்புகளை ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நகர்த்தி வருவதாகக் கூறுகின்றன" என்று சலோமே ஊடகங்களிடம் தெரிவித்தார். "புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் எரிசக்தி வளங்களும் முக்கியப் பங்காற்றக்கூடிய 2026-ஆம் ஆண்டில் பனிக்கட்டி உருகும் சூழலில், நேட்டோ (NATO) படைகளுடன் நேரடி மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது," என்றும் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா பற்றிய அதிர்ச்சியளிக்கும் கணிப்பு
ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் ஏற்படக்கூடிய மோதல் குறித்தும் சலோமி எச்சரித்துள்ளார். "நைஜரின் வடக்குப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் எழுச்சியால், மேற்கத்தியப் படைகள் வெளியேறிய பிறகு தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க விரும்பும் நாடுகளுக்கு இடையே மறைமுக மோதல்களுக்கான களமாக அப்பகுதி மாறக்கூடும்" என்று அவர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications