Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா?
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கையில், ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலகமே இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் தத்தளித்து வருகிறது. இந்த கொடிய வைரஸால் 1.8 கோடியைத் தாண்டியது. இதுவரை இந்த தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

உலகெங்கிலும் உள்ள சுமார் 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் கோவிட்-19 தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் நிலையில் மருத்துவ குழுக்களும், ஆராய்ச்சி குழுக்களும் ஒவ்வொரு நாளும் இந்த பெருந்தொற்று குறித்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்கின்றன. கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கையில், ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிய அறிக்கை
சமீபத்திய அறிக்கையின் படி, சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்யாவின் வெண்டர் மாநில ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆய்வுக் குழு, அறை வெப்பநிலையில் உள்ள நீர் உண்மையில் பெருந்தொற்று நோய்களின் வளர்ச்சிக்கு இடைநிறுத்தத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்துள்ளது.

ஆய்வு கூறுவது என்ன?
கொரோனா வைரஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சாதாரண நீர் உதவும் என்று வெக்டர் மாநில ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில், கொரோனா வைரஸின் 90 சதவீத துகள்கள் 24 மணிநேர இடைவெளியில் அறை வெப்பநிலை நீரில் இறந்துவிட்டதும், 72 மணிநேரத்தில் 99.9 சதவீதம் துகள்கள் கொல்லப்பட்டதும் கண்டறியப்பட்டது.

கொதிக்கும் நீர் உடனே கொல்லும்
மேலும் நாவல் கொரோனா வைரஸ் சுடுநீரில் இறந்து விடும். அதிலும் கொதிக்கும் நீர் வைரஸை உடனடியாகவும், முழுமையாகவும் கொல்லும் என்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குளோரின் நீரும் வைரஸை கொல்லும்
ஸ்புட்னிக் செய்தி அறிக்கையின் படி, ஆராய்ச்சியாளர்கள் குழுவும் குளோரினேட்டட் நீர் வைரஸைக் கொல்ல மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தது. மேலும் இந்த கொரோனா வைரஸ் குளோரின் தண்ணீர் மற்றும் கடல் நீரில் சிறிது நேரம் உயிர் வாழ முடியும் என்றாலும், பெருக்கமடையவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. ஆகவே தொற்றுநோயின் ஆயுட்காலம் நீரின் வெப்பநிலைப் பொறுத்தது.

2021-இல் மில்லியன் கணக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள்
ரஷ்யா தான் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை அடுத்த மாதம் மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
"எங்களால் ஒரு மாதத்திற்கு பல்லாயிரம் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி எண்ணிக்கை பல மில்லியனாக அதிகரிக்கும்" என்று தொழில்துறை அமைச்சர் டெனிஸ் மந்துரோவ் மாநில செய்தி நிறுவனமான TASS மூலமாக வெளியிடப்பட்ட பேட்டியில் கூறியுள்ளார்.

தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யாவின் விரைவான அணுகுமுறை
உலகமே கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யா பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின் படி, கொரோனா வைரஸிற்கு எதிராக அக்டோபர் மாதத்தில் ஒரு பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தை நடத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு வரிசை கட்டி இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபரில் ரஷ்யாவால் தடுப்பூசியை வெளியிட முடியுமா?
கமலேயா நிறுவனம் உருவாக்கிய அடினோவைரஸ் அடிப்படையிலான தடுப்பூசியின் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் ஜூலை 15 அன்று அறிவித்திருந்தனர். ஊடக அறிக்கையின் படி, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ அக்டோபரில் "விரிவான தடுப்பூசி" தொடங்க ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை உலகளவில் நிபுணர்களிடம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.



Click it and Unblock the Notifications











