Just In
- 51 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குளிர்காலத்தில் கடலைமிட்டாய் சாப்பிடுவது ரொம்ப நல்லது - ஏன் தெரியுமா?
குளிர்காலத்திற்கு ஏற்ற திண்பண்டமாக நிலக்கடலையைக் கருதலாம். ஏனெனில் நிலக்கடலை நமது உடலுக்கு வெதுவெதுப்பைத் தருகிறது. அதோடு நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.
நாம் இப்போது குளிர்காலத்தில் இருக்கிறோம். குளிர்காலம் என்றாலே ஏதாவது ஒரு நமக்குப் பிடித்த திண்பண்டத்தைக் கொரிக்க வேண்டும் என்று ஆசை வரும். பலரும் பல திண்பண்டங்களை விரும்பி கொரிப்பர். அந்த வகையில் குளிர்காலத்திற்கு ஏற்ற திண்பண்டமாக நிலக்கடலையைக் கருதலாம். ஏனெனில் நிலக்கடலை நமது உடலுக்கு வெதுவெதுப்பைத் தருகிறது. அதோடு நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.
நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம், அல்லது வட இந்திய திண்பண்டமான கஜாக் செய்தும் சாப்பிடலாம். அது மிகவும் ருசியாக இருக்கும். ஆகவே நாம் ஏன் இந்த குளிர்காலத்தில் நிலக்கடலையை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
உணவிற்கு சுவை சேர்க்கும் நிலக்கடலை
சட்னி முதல் மசாலா கலவை வரை எல்லா உணவுப் பொருட்களிலும் நிலக்கடலையைச் சேர்த்துக் கொள்ளலாம். நிலக்கடலை நமது உணவுக்கு தனி சுவையைக் கொடுக்கிறது. நிலக்கடலையை வறுத்து நிலக்கடலை வெண்ணெயைத் (peanut butter) தயாரிக்கலாம் அல்லது உப்புமாவில் (poha) நிலக்கடலையை பரப்பி அதை அலங்கரிக்கலாம்.
நிலக்கடலையை வறுக்கலாம் அல்லது நிலக்கடலை மசாலா செய்யலாம். மேலும் நிலக்கடலை லட்டு செய்யலாம். நமது பற்கள் உறுதியாக இருந்தால் இனிப்பான கடலைமிட்டாய் செய்து சாப்பிடலாம். பிஸ்கட்டுகள் (cookies) அல்லது இனிப்பு வடைகள் போன்ற எந்த உணவாக இருந்தாலும் அவற்றில் நிலக்கடலையைச் சேர்த்தால் அவை நமது நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு சுவையைக் கொடுக்கும்.
புரோட்டீன்களை பொதிந்து வைத்திருக்கும் நிலக்கடலை
பொதுவாகவே நிலக்கடலை புரோட்டீன்களை அதிக அளவில் வைத்திருக்கிறது. அதாவது 100 கிராம் நிலக்கடலையில் 25.8 கிராம் புரோட்டீன் உள்ளது. நிலக்கடலை வெண்ணெயை (peanut butter) உண்டால், அது இனிப்பு மீது நாம் கொண்டிருக்கும் ஆசையை நிறைவு செய்வதோடு நமக்கு போதுமான அளவு புரோட்டீனையும் வழங்குகிறது. ஆனால் நிலக்கடலையை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமானால் நமது உடல் எடை அதிகரித்துவிடும்.
இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்கும் நிலக்கடலை
நிலக்கடலையில் குறைவான அளவே குளுக்கோஸ் உள்ளதால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக நிலக்கடலை இருக்கிறது. மேலும் நிலக்கடலையில் மாங்கனீசு (manganese) இருப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவிடாமல் தடுக்கிறது. ஆகவே நமது உணவில் நிலக்கடலையைச் சேர்த்துக் கொண்டால் அதற்கான நல்ல பலன்களைப் பெறலாம்.
மாரடைப்பைக் குறைக்கும் நிலக்கடலை
நிலக்கடலையில் அதிகமான அளவு தாதுக்கள் இருக்கின்றன. அதோடு ஆக்ஸிஜனேற்றிகளை எதிர்க்கும் துகள்களையும் அதிகம் வைத்திருக்கின்றன. நிலக்கடலையில் போதுமான அளவு டிரிப்டோபன் (Tryptophan) இருப்பதால் அது நம்மிடம் உள்ள சோர்வு, கவலை, மன அழுத்தம் மற்றும் மனதை அலைபாய விடுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவி செய்கிறது.
ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கு நிலக்கடலை
நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களை நிலக்கடலை சேமித்து வைத்திருக்கிறது. குறிப்பாக புரோட்டீன், ஒமேகா-3, ஒமேகா-6, நார்ச்சத்து, பயோட்டின், தாமிரம், ஃபோலேட் (folate), வைட்டமின் ஈ, தயமின் (thiamine), பாஸ்பரஸ் மற்றும் மங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது. 250 கிராம் நிலக்கடலையானது, 250 கிராம் இறைச்சி வழங்கும் அளவைவிட அதிகமான அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
சருமத்தை மெருகேற்றும் மற்றும் கூந்தலை பராமரிக்கும் நிலக்கடலை
நமது அன்றாட உணவில் நிலக்கடலையை சேர்த்துக் கொண்டால், நமது சருமம் மெருகேறும் மற்றும் நீண்ட கூந்தல் கிடைக்கும். பொதுவாக குளிர்காலத்தில் நமது சருமம் எளிதாக வறண்டுவிடும். அந்த சரும வறட்சி பிரச்சனையை சமாளிப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் நிலக்கடலையில் இருக்கும் அதிக அளவிலான அமிலங்களும் சேர்மங்களும் நமது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குவதோடு, சருமத்திற்கு பளபளப்பையும் அளிக்கிறது.
நிலக்கடலையில் இருக்கும் எல் ஆர்ஜினைன் (L-arginine) என்ற வேதிப்பொருள் நீளமான கூந்தலைப் பெற உதவி செய்கிறது. அதோடு முடியின் பலவீனமான வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதையும் தடுக்கிறது.