Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகின் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
அதில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். மெத்தி என்று அழைக்கப்படும் வெந்தயம், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கை வைத்தியத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு சிறந்த ஆன்டாசிட்டாக வேலை செய்வதில் இருந்து சர்க்கரை நோயை நிர்வகிப்பது வரை, வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. கீழே வெந்தயம் ஊற வைத்த நுரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அசிடிட்டிக்கு நல்லது
உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா? அசிடிட்டி என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது யாருக்கு வேண்டுமானாலும் வரும். வலிமிக்க நெஞ்செரிச்சல், நெஞ்சு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு போன்றவை அசிடிட்டியின் பொதுவான அறிகுறிகள் ஆகும். வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.
சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகிறது
சர்க்கரை நோய்/நீரிழிவு என்பது ஒரு பொதுவான வாழ்க்கை முறை நோயாகும். இந்நிலையானது உடலை இன்சுலின் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதுவும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது மற்றும் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. அதோடு இது குடலியக்கத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்கிறது
வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதால், அது செல்களில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கிறது.
அழகான சருமம்
உங்களுக்கு பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்படியானால் வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்கள். இதனால் அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது. வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளைப் போக்க உதவுகிறது. இத்தகைய விதைகளை உணவில் சேர்ப்பது மிகவும் எளிதானது என்றாலும், இதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.
வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?
வெந்தய நீரைத் தயாரிப்பது என்பது மிகவும் ஈஸி. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். என்ன தான் வெந்தயம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.