Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
கொரோனா பற்றிய அதிர வைக்கும் அடுத்த செய்தி.... அறிகுறியற்ற நோயாளிகளை வைரஸ் அமைதியாக அழிக்குமாம்..!
தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பலருக்கும் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. இதனால் கொரோனா வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவுவதற்கு அறிகுறியற்ற நோயாளிகள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா அதிவேகமாக உலகளவில் பரவி வருகிறது. இதன் பரவலைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் எழுகிறது. எவ்வளவு தான் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருந்தப்போதிலும், COVID-19 தொற்றுநோய் காட்டுத்தீப் போல பரவிக் கொண்டிருக்கிறது.

அது எப்படி என்று பலரும் யோசிக்கலாம். தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பலருக்கும் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. இதனால் கொரோனா வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவுவதற்கு அறிகுறியற்ற நோயாளிகள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதிய ஆய்வு
அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, SARS-CoV-2 நோய்த்தொற்று பரவுவதற்கு சுமார் 40 முதல் 45 சதவீதம் அறிகுறியற்ற நபர்கள் காரணமாக இருக்கலாம். அறிகுறியற்ற நோயாளிகளுக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டவில்லை என்றாலும், அந்த வைரஸ் அமைதியாக அவர்களின் உடலை சேதப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நுரையீரல் சேதம்
மேலும் டயமண்ட் பிரின்ஸ் கப்பலில் பயணித்த அறிகுறியற்ற நோயாளிகளை சி.டி. ஸ்கேன் செய்த போது அவர்களின் நுரையீரலில் அசாதாரணங்கள் தெரிந்தது. ஆகவே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், அந்த வைரஸ் அமைதியாக நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, அறிகுறியற்ற நோயாளிகளால் 14 நாட்களுக்கு மேல் வைரஸை பரப்ப முடியும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆய்வுக்காக, அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் நாவலின் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் குறித்த பொது தரவுத்தொகுப்புகளை ஆய்வு செய்தனர். இதில் நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்கள், கப்பல் பயணிகள், சிறை கைதிகள் மற்றும் பல்வேறு குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தணிப்பதற்கான சிறந்த வழிகள்:
தற்போதைய வைரஸின் அமைதியான பரவலால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலானது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதோடு நீண்ட கால சோதனையான தனிநபர்களை மீண்டும் மீண்டும் சோதனை செய்வது, அறிகுறியற்ற மற்றும் முன்கணிப்பு நபர்களிடையே வேறுபடுவதற்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தொற்றுநோயைக் தணிக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட நபர்களின் விரிவான சோதனை மற்றும் தொடர்பு தடத்தின் அவசியத்தையும் அறிவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். கொடிய வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மக்கள் எப்போதும் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

அறிகுறியற்ற குழுவில் யார் அதிகம் உள்ளனர்?
குழந்தைகள் உட்பட இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் தான் அறிகுறியற்ற அல்லது லேசான COVID-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆரோக்கியமான இளம் வயதினர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், நோய்க்கு கூட ஆளாகிறார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதய நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய்த் தொற்று மிதமான, கடுமையான மற்றும் சிக்கலான தொற்றுநோயாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆன்டிபாடி சோதனை
Asymptomatic என்பது அறிகுறி ஏதும் இல்லாமல் வைரஸை சுமப்பதாகும். இப்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸை சுமப்பவர்களை அடையாளம் காண ஆன்டிபாடி சோதனை சிறந்ததாக கருதப்படுகிறது. தற்போது, பல நாடுகளில் துல்லியமாக சோதனை மதிப்பீடு செய்வதற்கு ஆன்டிபாடி சோதனை தான் செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் முக்கியமான ஆரம்ப கால அறிகுறிகள்
கொரோனா வைரஸ் முக்கியமாக மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. குறிப்பாக பெரிய காற்றுப் பாதைகளைத் தான் சேதப்படுத்துகிறது. எனவே லேசான நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு பொதுவாக வறட்டு இருமல், லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்கிறார்கள். அதோடு சிலர் வாசனை இழப்பு, சோர்வு, தசை வலி அல்லது தலை வலி, தொண்டைப் புண் அல்லது மூக்கு ஒழுகல் போன்ற அறிகுறிகளையும் உணரலாம்.

எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?
கொரோனா வைரஸின் அறிகுறிகள் பொதுவாக 7-10 நாட்கள் வரை நீடிக்கும். மதிப்பீடுகளின் படி, அறிகுறியற்ற கொரோனா வழக்குகளில் சுமார் 81% சதவீதம் லேசானவை. இருப்பினும், சில நோயாளிகளின் நிலைமை மோசமாகக்கூடும். குறிப்பாக நாள்பட்ட உடல்நல பிரச்சனைகள் கொண்டவர்களின் நிலைமை படுமோசமாகலாம்.

யாருக்கு சிகிச்சை அவசியம்?
லேசான அல்லது அறிகுறியற்ற தொற்று உள்ள பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை. அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும், மோசமாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்களான நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனை கொண்டவர்கள் கட்டாயம் சிகிச்சைப் பெற வேண்டும். அதோடு, மோசமான அறிகுறிகளைக் கொண்டவர்களும் மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்.



Click it and Unblock the Notifications











