Just In
- 55 min ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 6 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 9 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 11 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிகமா கோபப்பட்டா குண்டாவீங்க தெரியுமா?
கோபப்படாத மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. இருந்தாலும் அதுவும் ஒரு அளவிற்கு தான் அல்லவா? அதுமட்டுமல்லாது, அறிவியல் என்ன கூறுகிறது என்றால், அதிகமாக கோபப்படுபவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுமாம்.
தினசரி வாழ்க்கையில் கோபம் என்பது மனிதனின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. கோபப்படாத மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. இருந்தாலும் அதுவும் ஒரு அளவிற்கு தான் அல்லவா? அளவிற்கு மீறி கோபப்படுபவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் பிரச்னை இருக்க தான் செய்யும். அதிகமான கோபம், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளையும் உடன் அழைத்து வந்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
அதுமட்டுமல்லாது, அறிவியல் என்ன கூறுகிறது என்றால், அதிகமாக கோபப்படுபவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுமாம். ஒருவேளை நீங்கள், அதிகமாக கோபப்படுபவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
அதிகமான கோபம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்
பொதுவாக ஒருவர் அதிகமான கோபத்திற்கு ஆளாகிறார் என்றால் அவரை பார்த்தாலே கண்டுபிடித்து விடலாம். முகம் மற்றும் கண் சிவப்பது, உடல் நடுக்கம், வியர்வை உள்ளிட்டவை ஏற்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும் அட்ரினலின், சி.எச்.ஆர் மற்றும் கார்டிசோல் போன்ற சில வேதிப்பொருட்கள் அல்லது ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. அதிகமான கோபத்தால் மூளை இந்த ஹார்மோன்களை வெளியிடும் போது உடல் அதிகப்படியான ஆற்றலை பெறுவதாலும், உடலில் அதிகமான இரத்த ஓட்டத்தாலும், இதுப்போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது.
பசி கோபத்தை அதிகரிக்கும்
கோபத்தை தூண்டும் காரணிகள் அடங்கியதும், உடலில் உள்ள அட்ரினலின் ஹார்மோன் குறையத் தொடங்கும், அதுவும் கார்டிசோல் ஹார்மோனால் தான். அத்தகைய கார்டிசோல் ஹார்மோன், கோபத்தை ஆற்றல் முழுவதுமாக வெளியேறி பின்பு வயிற்று பசியை தூண்டச் செய்யும். இதனால் தான், கோபப்படும் போதும், வருத்தப்படும் போதும் அதிகமான பசி ஏற்படுகிறது. அதிகமான கோபம் புரிந்துணர்வையும், சிந்தனை திறனையும் குறைப்பதால் தான் பசி ஏற்படுகிறது. இது ஆரோக்கியமானது இல்லை என்றாலும், உடல் அமைதி அடைகிறது.
வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு சேகரிக்கப்படும்
அதிகப்படியான கோபம், வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பை அதிகமாக சேகரிக்கும். இதற்கு காரணம், கோபத்தால் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன் உடலின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை தடுத்துவிடும். இதனால் தான், கோபப்பட்ட பிறகு சாப்பிடும் உணவு முழுவதுமாக ஆற்றலாக மாறாமல் வெறும் கோபத்தை தணிக்கும் பொருளாக மட்டுமே அமைந்துவிடுகிறது.
கோபத்தால் உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது எதையும் யோசிக்க முடியாது. அதனால் தான், கோபம் தணிந்த பிறகு சிலவற்றை மட்டும் மறக்காமல் செய்தால் உடல் எடை கூடுவதை சுலபமாக தடுத்துவிடலாம்.
தண்ணீர்
கோபம் ஏற்பட்டவுடன் உடனடியாக ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடியுங்கள். இது கோபத்தை குறைப்பதோடு, கோபத்தால் ஏற்படக்கூடிய பசியையும் தடுத்துவிடும்.
கலோரி குறைவான தீனி
கோபத்திற்கு பிறகு பசி ஏற்பட்டால், ஆரோக்கியமற்ற நொறுக்கி தீனியை சாப்பிடுவதை தவிர்த்து, கலோரிகள் குறைந்த எதையாவது சாப்பிடுவது சிறந்தது. இதனால், தேவையற்ற கொழுப்பு சேர்வதை தவிர்த்திடலாம்.
மூச்சு பயிற்சி
கோபம் வந்தால் உடனே ஒரு ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, 2 நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் தனிமையாக உட்கார்ந்தோ, நின்றோ விடவும். இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.