Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
மலத்தை எவ்வளவு நேரம் அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்னை வரும்னு தெரியுமா?... இத படிங்க...
மலம் என்பது என்ன?... நாம் சாப்பிடும் உணவானது செரிமானத்துக்குப் பின் உள்ள கழிவுகளும் பாக்டீரியாவும் சேர்ந்தது தான் மலமாக வெளியேறுகிறது.
நாம் பொதுவாக காலையில் எழுந்ததும் மலம் கழிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருவோம். சில பேருக்கு மலச்சிக்கல் இருந்தால் இதுவும் பிரச்சினையாகவே இருக்கும். குறிப்பாக நாம் நீண்ட தூரம் பேரூந்துகளில் பயணம் செய்யும் அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம், சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்தால் அடக்கி வைத்து கொள்வோம். இப்படி செய்யலாமா?

மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடக்கும் விஷயம். ஆனால் நீங்கள் எல்லா இடத்திலும் மலம் கழிக்கவும் இயலாது. இதனால் சில சமயங்களில் சில மணி நேரம் மலத்தை அடக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி எவ்வளவு நேரம் இருக்கலாம்? இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

அவசரம்
மலம் குடல் வழியாக வெளியேற்றப்படும் போது நமது உடலின் ரெக்டம் பகுதியை தொட்டவுடன் மூளைக்கு சிக்னல் செல்லும். மூளையானது மலத்தை வெளியேற்ற கட்டளையிட்டே பிறகு மலமானது வெளியேறும். இந்த தாமதிக்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சில சமயங்களில் சில உணவுகள் கூட இந்த சிக்னலை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவுகள் இயற்யாகவே குடல் தூண்டுதலில் ஈடுபடுகின்றன. மேலும் செரிமான நொதியையும் ஒழுங்குமுறை செய்கிறது.

இரண்டு மணி நேரம்
மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி நீங்கள் மலம் கழித்தலை அடக்கினால் நிறைய வயிற்று கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

ஆறு மணி நேரம்
நீங்கள் மலம் கழித்தலை ஆறு மணி அடக்கி வைத்தால் அது மலச்சிக்கலாக மாற நேரிடும். எனவே அடிக்கடி அப்படி அடக்கி வைப்பதை தவிருங்கள்.

பன்னிரண்டு மணி நேரம்
ஆறு மணி நேரம் மலத்தை அடக்கி வைப்பதால் மலமானது ரெம்ப இறுகி இறுக்கமடைந்து விடும். 12 மணி நேரம் அடக்கி வைக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகி விடும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம், வலி மற்றும் பைல்ஸ் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

நீண்ட நேரம்
நீங்கள் தொடர்ச்சியாக மலம் கழித்தலை அடக்கி வைக்கும் போது மலமிளக்கிகளை பயன்படுத்தி எளிதாக வெளியேற்ற முற்படலாம். அதுவும் தோல்வியடைந்தால் செயல்முறை நீக்கம் மூலம் வெளியேற்றலாம்.



Click it and Unblock the Notifications
