Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
தூங்கும்போது ஏதோ ஒரு சக்தி போட்டு உங்கள அமுக்கியிருக்கா?... இது யாருக்கெல்லாம் வரும்?
அமுக்குவான் பேய் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தூங்கி சட்டென்று விழிக்கும்போது, கை கால்களை அசைக்க முடியாமல் பேச முடியாமல் எதோ ஒன்று அமுக்குவது போல் தோன்றும் ஒரு நிலையை தான் அமுக்குவான் பேய் அல்லத
அமுக்குவான் பேய் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தூங்கி சட்டென்று விழிக்கும்போது, கை கால்களை அசைக்க முடியாமல் பேச முடியாமல் எதோ ஒன்று அமுக்குவது போல் தோன்றும் ஒரு நிலையை தான் அமுக்குவான் பேய் அல்லது தூக்க பக்க வாதம் என்று கூறுவார்கள்.

மூளை செயால்ற்றிக் கொண்டிருக்கும்போது உடல் இயங்க முடியாத நிலை எப்படி உண்டாகிறது என்பது ஒரு கேள்வியாக உள்ளது.

அமுக்குவான் பேய்
அமைதியான தூக்கம் மற்றும் தூக்கத்தின் சரியான வழியை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன, ஆனால் தூக்கத்தைப் பற்றி சில விநோத உண்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றிய தகவல் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. தூக்கத்தைப் பற்றியும் அதன் சரியான வழிகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இணையத்தில் உள்ள நிலையில், உலக ஜனத்தொகையில் 7.6% மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தூக்க பக்கவாதம் பற்றிய தகவல் மிகவும் குறைந்த அளவில் உள்ளது ஆச்சர்யப்படத்தக்க உண்மை.

தூக்க பக்கவாதம்
தூக்க பாதிப்பு கொண்ட மாணவர்கள், பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்கியது இந்த புள்ளி விவரம். தூக்க பக்கவாதம் என்ற நிலையில் ஒரு மனிதன் தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது, அவன் கண்கள் தவிர மற்ற உடல் பாகங்கள் அசைவற்ற நிலையில் இருப்பதாகும். இரவில் நடுவில் எழுந்திருப்பது ஒரு கனவு அல்லது பிற காரணங்களுக்காக அல்ல, ஆனால் அவர்கள் திடீரென்று எழுந்து இந்த நிலைமையை அனுபவிக்கிறார்கள். மூளை இயங்கிக் கொண்டிருக்கும்போது உடல் பாகங்கள் எப்படி அசையாமல் இருக்க முடியும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

எப்படி இருக்கும்?
image courtesy
இது விரைவில்லாத கண் இயக்கத்தின் நிலையாக அறியப்படுகிறது. மனிதனின் தூக்கத்தில் எல்லா நிலைகளிலும் கனவு வரும். ஆனால் REM என்ற நிலையில் தோன்றும் கனவுகள் நிஜமாக இருப்பது போல் தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் மூழ்குவது போல் கனவு வந்தால் நிஜமாகவே நீங்கள் மூழ்குவது போல் உணர்வீர்கள். இந்த நிலை சில நிமிடங்கள் நீடித்து இருக்கும். சோகமான மனநிலை அல்லது மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படும். இது ஒரு திகில் நாவலில் இருந்து ஒரு பக்கத்தைப் போன்றதாக இருக்கலாம், ஆனால் இந்த நிலை நியாயமானது மற்றும் சில வகையான தூக்க பக்க வாதம் உள்ளன.

இன்குபஸ் மாயை
image courtesy
இன்குபஸ் மாயைகள் என்பது உங்கள் மார்பில் ஒரு கடுமையான அழுத்தத்தை உணர்கின்றன, மேலும் அதிக எடை கொண்ட ஒரு பொருள் உங்களை அழுத்துவது போன்ற உணர்வைத் தரும். அந்த அழுத்தம் உங்கள் நுரையீரல்களிலிருந்து காற்று வெளியேற்றுவது போன்ற ஒரு மாயை உண்டாகும். இதனை அனுபவிப்பவர்கள் மூச்சு விட முடியாத நிலை உண்டாகும். ஆனால் இது ஒரு மன விளையாட்டு. REM நிலையில் இருக்கும் போது உங்கள் சுவாச வடிவங்கள் மிகவும் ஆழமற்றதாக இருக்கின்றன. இதனால் உங்கள் காற்றுபாதை சுருங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மூளையின் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய அமிக்டலா என்னும் பகுதியில் உள்ள பய ஊக்கிகளுடன் மேலே கூறப்பட்ட அறிகுறிகளும் இணைந்து, யாரோ ஒருவர் நம்மை அழுத்துவது போன்ற உணர்வைத் தருகிறது.

இன்றூடர் மாயை
இன்றூடர் மாயையை அனுபவிப்பவர்கள், பார்ப்பது மற்றும் கேட்பது போன்ற உணர்வுகளில் ஒரு வித பயம் மற்றும் ஊடுருவலை உணர்வார்கள். இன்குபஸ் மாயையுடன் கூடுதலாக, தூக்க முடக்குதலின் போது ஏற்படக்கூடிய ஒரு முரண்பாட்டை தீர்க்க பாதிக்கப்பட்டவர் மனதில் ஒரு பார்வை உருவாகிறது. இது உடலை "ஹைபீர் விழிப்புணர்வு நிலை" என்று அழைக்கப்படும் ஒரு நிலைக்கு வழிநடத்துகிறது. இந்த நிலையில் ஒரு சிறய தூண்டுதலையும் உணரும் நிலை மக்களுக்கு உண்டாகிறது. இந்த நிலையில் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து சாயல்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. இந்த தூக்க வாத நிலையில் ஒரு சிறிய ஒலி கூட திகிலூட்டக்கூடியதாக உள்ளது. இன்குபஸ் மற்றும் இன்றூடர் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளன.

அசாதாரணமான உடல் அனுபவங்கள்
இந்த தூக்க வாதம் என்பது ஒரு அசாதாரணமான அனுபவம். இந்த நிலையில் உடலில் அனுபவம் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் உங்கள் அறையில் இருந்து பறப்பது போல் தோன்றலாம், ஒரு அசாதாரணமான செயல்கள் நடப்பது போல் தோன்றலாம். நடப்பதற்கு சாத்தியம் குறைவாக இருக்கும் செயல்கள் நடப்பது போல் தோன்றும். இது மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானது, ஏனென்றால் மூளையின் பல்வேறு பகுதிகளும் செயலாக்கத்தில் உள்ளன, இது ஒரு நபரின் விழிப்புணர்வு நிலைக்கு ஒத்திருக்கிறது. அசாதாரண உடல் அனுபவம் REM நிலைகளுடன் தொடர்புடையது.
இதில் மூளைத்தண்டு, சிறுமூளை, உயிரணு மையம் போன்றவை தூக்கத்தில் செயல்படுகின்றன. மூளை நரம்பு முடிச்சுடன் மேடுல்லா ஆப்லாங்கடாவை இணைக்கும் மூளைத்தண்டின் ஒரு பகுதியாகிய மூளைப்பாலம் தூக்கத்தின்போது செயலாற்றலை தடை செய்கிறது. இந்த மாயையின்போது, நீங்கள் பறக்காமல் இருக்கும்போது, பறப்பது போன்ற உணர்வு தோன்றும். இந்த பகுதி மிக அதிகமாக சுறுசுறுப்புடன் இருப்பது இதன் காரணம்.

யாருக்கு வரும்?...
தூக்க வாதம் என்பது ஒரு பரம்பரை நோய். ஆனால் இது யாருக்கும் வரலாம். தூக்க வாதத்தை அதிகரிக்கும் பல்வேறு இதர காரணிகள் தூக்கமின்மை, வீண் பயண களைப்பு , தூக்கம் இல்லாமை, தூக்க தொந்தரவுகள், மற்றும் வேலை மாற்றங்கள் போன்றவையாகும். இந்த நிலைமை குறிப்பிட்ட சில நபர்களிடையே பொதுவானது. மேலும் , ஹைப்பர் டென்ஷன், வலிப்பு நோய் தாக்கங்கள், தூக்க சுழற்சியை நிர்வகிக்க முடியாமல் எந்த நேரத்திலும் தூக்கத்தை தழுவும் தூக்க மயக்க நோய் போன்றவைற்றுடன் இந்த பாதிப்பு இணையக் கூடும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு , தூக்க வாதத்தை அதிகரிக்கச் செய்யலாம். ஆகவே சரியான தூக்க அட்டவணை மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் இதில் இருந்து குணமடைய முடியும். ஒரே மருந்தால் இந்த பாதிப்பிற்கு நிவாரணம் பெற முடியாது. உங்களுக்கு ஏற்ற தீர்வை நீங்கள் ஆராய்ந்து கடைபிடிப்பதால் இந்த நிலையை வருங்காலத்தில் தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications