Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
நிலக்கடலை பாலைக் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
இங்கு நிலக்கடலை பாலைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று என்பது அனைவருக்குமே தெரியும். அந்த நட்ஸ்களில் ஒன்று தான் நிலக்கடலை. பலருக்கும் இது விருப்பமான ஒரு நட்ஸ் என்றும் கூறலாம். இந்த நிலக்கடலையை பால் எடுத்து குடித்தால், சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உங்களுக்கு நிலக்கடலை பாலை எப்படி தயாரிப்பது என்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். கீழே நிலக்கடலை பாலை எப்படி தயாரிப்பது என்றும், நிலக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
முந்திரி - 5
ஏலக்காய் - சிறிது

செய்முறை:
நிலக்கடலையை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். முந்திரியையும் ஊற வைக்கவும். பின் அந்த நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதோடு ஊற வைத்த முந்திரியையும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.
பின் இவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது ஏலக்காய் சேர்த்து, நீர் ஊற்றி அரைத்தால், சுவையான நிலக்கடலை பால் தயார்.

நன்மை #1
நிலக்கடலைக்கு அனைத்துவிதமான இரத்தக்கசிவையும் தடுக்கும் ஆற்றல் உண்டு. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலையை சாப்பிடுவது அதிகமான இரத்தப்போக்கைத் தடுக்கும்.

நன்மை #2
நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் மூளை சுறுசுறுப்பாகவும், எலும்புகள் வலிமையாகவும் இருக்கும்.

நன்மை #3
நிலக்கடலையில் இருக்கும் நியாசின் புண்கள், கொப்புளங்கள் போன்றவற்றை விரைவில் சரிசெய்வதோடு, வராமலும் தடுக்கும். மேலும் நிலக்கடலை சருமத்தைப் பளபளப்போடு வைத்துக் கொள்ளும்.

நன்மை #4
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலையை சாப்பிட, அதிகளவு உணவு உட்கொள்ள முடியாமல் போய், உடல் மெலிய ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications