Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இரவில் மூக்கடைப்பால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ அதற்கான சில நிவாரணிகள்!
இயற்கை வழியில் மூக்கடைப்பைப் போக்க ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
குளிர்காலத்தில் பலர் மூக்கடைப்பால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். மூக்கடைப்பு பிரச்சனைக்கு பலரும் விக்ஸ், தைலம் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்பழக்கம் அப்படியே நீடித்தால், அது அப்படியே அடிமையாக்கிவிடும்.

ஆகவே இயற்கை வழியில் மூக்கடைப்பைப் போக்க ஒருசில இயற்கை நிவாரணிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

நிவாரணி #1
சீமைச்சாமந்தி பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதிலிருந்து வெளிவரும் ஆவியை நுகர்ந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நிவாரணி #2
க்ரீன் டீயை தேன் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், சுவாசப் பாதையில் இருக்கும் அழற்சி நீங்கி, மூக்கடைப்பு நீங்கும்.

நிவாரணி #3
பசலைக்கீரை மற்றும் முட்டைக்கோஸால் தயாரிக்கப்பட்ட காய்கறி ஜூஸை தினமும் சிறிது என 10 நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கலாம்.

நிவாரணி #4
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலமும் மூக்கடைப்பைத் தடுக்கலாம்.

நிவாரணி #5
மிளகைக் கொண்டும் மூக்கடைப்பைப் போக்கலாம். அதற்கு ஒரு மிளகை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், உடனே மூக்கடைப்பு நீங்கும்.

நிவாரணி #6
இஞ்சி, பூண்டு போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியைத் தடுத்து, மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications











