Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
தினமும் புதினா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
எப்பவும் நாம் அரக்கப் பரக்க நான்-ஸ்டாப்பாக ஓடினாலும் மூளையை அப்பப்போ ரீசார்ஜ் பண்ணுவதுண்டு. சில சமயங்களில் சார்ஜ் போதாமல் நம் மூளையின் பேட்டரி குறையும் போது ஏற்படுவதுதான் உடல் மற்றும் மனச்சோர்வு. அதனை நீக்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட்டால் திரும்பவும் நான்-ஸ்டாப்பாக ஓடலாம். இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் புதினா டீ.
"நார்தம்ப்ரியா" பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் 'மார்க் மோஸ்',' ராபர்ட் ஜோன்', மற்றும் 'லக்கி மோஸ்' ஆகியோர் புதினாவில் உள்ள மகத்துவத்தை ஆராய்ச்சி செய்து அறிக்கையை, "பிரிட்டீஷ் சைக்காலஜி சொஸைட்டி " நடத்திய மாநாட்டின் போது சமர்ப்பித்தனர்.

ஆய்வில் வெற்றி பெற்றது புதினா டீ:
இந்த் ஆராய்ச்சியில் சுமார் 180 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆய்வு தொடங்கும் முன்பாக, அவர்களிடம் அவர்களின் மனநிலைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்னர் அவர்களை மூன்று பிரிவாக பிரித்து, ஒரு பிரிவிற்கு புதினாடீ யும், இன்னொரு பிரிவிற்கு செவ்வந்தி இதழ்களில் தயாரிக்கப்பட்ட டீ யும், மீதி இருந்த பிரிவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டது.
பின் 20 நிமிடம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் அறிவாற்றல் சோதித்தார்கள்.மேலும் அவர்களின் மன நிலைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் செவந்தி இதழ் டீ மற்றும் வெந்நீரை விட புதினாடீ குடித்ததனால் நினைவாற்றலும், புத்திக் கூர்மையும் மேம்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
செவ்வந்தி-மந்தத்தன்மை தரும்:
செவ்வந்தி இதழ் டீ குடிப்பதனால், நினைவாற்றலும், கவனித்தலும் குறைந்து காணப்பட்டது. மேலும் அது மந்தத்தன்மையும் கொடுக்கிறதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. புதினா மற்றும் செவ்வந்தி இதழ்கள் இரண்டுமே மூலிகைகளாய் இருந்தாலும்,நேர் எதிர் குணங்களை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது"என வியந்திருக்கிறார் டாக்டர் மோஸ்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

