Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஏன் பச்சைத்தண்ணியை குடிக்கக் கூடாது?
உடலுக்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. ஆனால் தண்ணீரே பாதிப்புகளைத் தரும் என அறிவீர்களா? எப்போது என்றால் அதனை காய்ச்சி குடிக்காதபோது.
பச்சை தணியை குடிப்பதுதான் எல்லாருக்கும் பிடிக்கும். சுடு நீரை காய்ச்சல் வரும்போது கூட பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. ஆனால் பச்சை தண்ணி பல பிரச்சனைகளைத் தரும்.
நீரை கொதிக்க வைத்து குடிங்கள் என எல்லா மருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் வெறும் நோய்க்கான ஆறுதல் மட்டுமல்ல அதில் பல நன்மைகளும் உள்ளன என்பது தெரியுமா?

சுடு நீர் ஒரு விலையில்லா மருந்து என தெரியுமா?
சாதரணமாக குடிக்கும் நீரில் பல மினரல்கள், கிருமிகள் கலந்திருக்கும். அதோடு கார்பரேஷன் கிருமிகளை அழிக்க கலந்திருக்கும் குளோரின் போன்ற ரசாயனங்களின் நச்சுக்களும் இருக்கும்.
ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கும்போது, உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் மற்ற பிரச்சனைகளோடு சேர்த்து , இந்த நீரோடும் போராட வேண்டியிருக்கும். ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கக் கூடாது.

எவ்வாறு கொதிக்க வைக்க வேண்டும்?
குறைந்த பட்சம் 20 நிமிடங்கள், பாத்திரத்தை மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதனால் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. அதோடு கடின மினரல்கள் அடியில் தங்கிவிடும்போது வடிகட்டி குடிப்பதால் சிறு நீரக பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -1:
உங்கள் குடல்களில் படலமாய் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து வயிற்றிற்கு அனுப்பும். இதனால் ரத்தத்தில் கொழுப்பு சேராமல் காக்கப்படுகிறது.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-2 :
காய்ச்சல், தொற்று ஏற்படும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு நன்றாக காய்ச்சிய சுடு நீரை வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் விரைவில் குணமாகும்.
நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள் தேநீர் போல் அவ்வப்போது வெந்நீர் குடித்து வந்தால் நோய்களின் தீவிரம் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-3 :
தினமும் போதிய இடைவேளைகளில் வெந்நீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ், ஒற்றைத் தலைவலி, சரும வியாதிகள் ஆகியவை குறையும். இதய நோய்கள் வராது.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -4
உடல் எடை குறையும். சுடு நீர் குடிக்கும்போது நச்சுக்களும், கழிவுகளும் வெளியேற்றப்படும்.கொழுப்பு கரையும். வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெறும்.



Click it and Unblock the Notifications