Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உலர் திராட்சையில் மறைந்துள்ள அசர வைக்கும் நன்மைகள்!!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உலர் பழ வகை தான் உலர் திராட்சை. நல்ல உயர்தரமான திராட்சையை பதப்படுத்தி உலர வைத்து உலர் திராட்சையான பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய உலர் திராட்சையில் சாதாரண திராட்சையில் உள்ள சத்துக்களை விட அதிக அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளது.
பலர் இந்த உலர் திராட்சையை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவார்கள். உண்மையிலேயே, இது ஒரு சிறப்பான ஸ்நாக்ஸ் தான். அதுமட்டுமின்றி, இந்த உலர் திராட்சை உடலின் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இங்கு உலர் திராட்சை கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளை குணமாக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் எடை அதிகரிக்கும்
எடையை அதிகரிக்க வேண்டுமெனில் கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கொழுப்பு இல்லாத உணவை உண்பதன் மூலமும் எடையை அதிகரிக்கலாம். அதற்கு உலர் திராட்சை சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் கொழுப்புக்களை அதிகரிக்காமலேயே எடையைக் கூட்டலாம்.

தொண்டை கரகரப்பு
தினமும் இரவில் பசும் பாலில் 20 உலர் திராட்சையைப் போட்டு காய்ச்சி, 10 மிளகைப் போட்டு, அத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்.

மஞ்சள் காமாலை
கோடையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்க, உலர் திராட்சையை சாப்பிட வேண்டும். அதிலும் இதனை தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உலர் திராட்சையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவ்வப்போது உலர் திராட்சையை சாப்பிட்டு, உடலை நோய்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்
உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், உலர் திராட்சையை பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால், அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் சீராக நடைபெறம்.

மாதவிடாய் பிரச்சனைகள்
மாதவிடாய் பிரச்சனையால் கஷ்டப்படும் பெண்கள், உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் 1/2 மணிநேரம் உற வைத்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

இதயம் வலிமையாகும்
உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, வலிமையும் அடையும்.

மூல நோய்
மூல நோய் இருப்பவர்கள், தினமும் காலை மற்றும் மாலையில் உணவிற்கு பின் உலர் திராட்சை பழங்களை சாப்பிட மூல நோயில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications











