Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஹோமியோபதி மருந்துகளால் நல்ல பலன் கிடைக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...
இங்கு ஹோமியோபதி மருந்துகளை எடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பழங்காலம் முதலாக இருந்து வந்த மருத்துவ முறைகள் தான் ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்றவை. ஆசியாவில் உள்ள 80% மக்கள் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறை பொதுவானது.

இது முற்றிலும் இயற்கை மூலிகைகளை மருந்தாக கொண்டிருப்பதால், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதும் குறைவு. ஆனால் ஹோமியோபதி சிகிச்சையை மேற்கொண்டு, மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே, அந்த மருந்தின் முழு நன்மையையும் பெற முடியும்.

விஷயம் #1
ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதற்கு முன்போ அல்லது உட்கொண்ட பின்போ, 10 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.

விஷயம் #2
ஹோமியோபதி மருந்துகளை எடுப்பதற்கு முன்பு வாயை நீரால் நன்கு கழுவிக் கொள்வதோடு, நாக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஷயம் #3
ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அல்லோபதி அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுக்கக்கூடாது. இதனால் எந்த ஒரு மருந்தும் செயல்படாமல் போய்விடும்.

விஷயம் #4
ஹோமியோபதி மாத்திரைகளை உள்ளங்கையில் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால் அது காற்றில் கரைந்து, அந்த மாத்திரையின் சக்தி போய்விடும்.

விஷயம் #5
ஹோமியோபதி மருந்துகளை சூரிய வெளிச்சம் படும் இடத்திலோ அல்லது மருந்து பாட்டிலை திறந்தவாறோ வைத்திருக்கக்கூடாது. எப்போதும் இந்த மருந்து பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடுவதோடு, குளிர்ச்சியான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

விஷயம் #6
ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்ளும் போது, காபி அல்லது டீ போன்றவற்றைக் குடிக்கக்கூடாது. இவைகள் மருந்தின் சக்தியைக் குறைத்துவிடும்.

விஷயம் #7
ஹோமியோபதி சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், சிட்ரஸ் பழங்கள் அல்லது புளிப்பான உணவுகள் அல்லது பானங்களை, மருந்து உட்கொண்ட பின் எடுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications











