Latest Updates
-
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா?
ஹோமியோபதி மருந்துகளால் நல்ல பலன் கிடைக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...
இங்கு ஹோமியோபதி மருந்துகளை எடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பழங்காலம் முதலாக இருந்து வந்த மருத்துவ முறைகள் தான் ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்றவை. ஆசியாவில் உள்ள 80% மக்கள் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறை பொதுவானது.

இது முற்றிலும் இயற்கை மூலிகைகளை மருந்தாக கொண்டிருப்பதால், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதும் குறைவு. ஆனால் ஹோமியோபதி சிகிச்சையை மேற்கொண்டு, மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே, அந்த மருந்தின் முழு நன்மையையும் பெற முடியும்.

விஷயம் #1
ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதற்கு முன்போ அல்லது உட்கொண்ட பின்போ, 10 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.

விஷயம் #2
ஹோமியோபதி மருந்துகளை எடுப்பதற்கு முன்பு வாயை நீரால் நன்கு கழுவிக் கொள்வதோடு, நாக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஷயம் #3
ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அல்லோபதி அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுக்கக்கூடாது. இதனால் எந்த ஒரு மருந்தும் செயல்படாமல் போய்விடும்.

விஷயம் #4
ஹோமியோபதி மாத்திரைகளை உள்ளங்கையில் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால் அது காற்றில் கரைந்து, அந்த மாத்திரையின் சக்தி போய்விடும்.

விஷயம் #5
ஹோமியோபதி மருந்துகளை சூரிய வெளிச்சம் படும் இடத்திலோ அல்லது மருந்து பாட்டிலை திறந்தவாறோ வைத்திருக்கக்கூடாது. எப்போதும் இந்த மருந்து பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடுவதோடு, குளிர்ச்சியான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

விஷயம் #6
ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்ளும் போது, காபி அல்லது டீ போன்றவற்றைக் குடிக்கக்கூடாது. இவைகள் மருந்தின் சக்தியைக் குறைத்துவிடும்.

விஷயம் #7
ஹோமியோபதி சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், சிட்ரஸ் பழங்கள் அல்லது புளிப்பான உணவுகள் அல்லது பானங்களை, மருந்து உட்கொண்ட பின் எடுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications