Latest Updates
-
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்
ஹோமியோபதி மருந்துகளால் நல்ல பலன் கிடைக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...
இங்கு ஹோமியோபதி மருந்துகளை எடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பழங்காலம் முதலாக இருந்து வந்த மருத்துவ முறைகள் தான் ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்றவை. ஆசியாவில் உள்ள 80% மக்கள் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறை பொதுவானது.

இது முற்றிலும் இயற்கை மூலிகைகளை மருந்தாக கொண்டிருப்பதால், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதும் குறைவு. ஆனால் ஹோமியோபதி சிகிச்சையை மேற்கொண்டு, மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே, அந்த மருந்தின் முழு நன்மையையும் பெற முடியும்.

விஷயம் #1
ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதற்கு முன்போ அல்லது உட்கொண்ட பின்போ, 10 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.

விஷயம் #2
ஹோமியோபதி மருந்துகளை எடுப்பதற்கு முன்பு வாயை நீரால் நன்கு கழுவிக் கொள்வதோடு, நாக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஷயம் #3
ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அல்லோபதி அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுக்கக்கூடாது. இதனால் எந்த ஒரு மருந்தும் செயல்படாமல் போய்விடும்.

விஷயம் #4
ஹோமியோபதி மாத்திரைகளை உள்ளங்கையில் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால் அது காற்றில் கரைந்து, அந்த மாத்திரையின் சக்தி போய்விடும்.

விஷயம் #5
ஹோமியோபதி மருந்துகளை சூரிய வெளிச்சம் படும் இடத்திலோ அல்லது மருந்து பாட்டிலை திறந்தவாறோ வைத்திருக்கக்கூடாது. எப்போதும் இந்த மருந்து பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடுவதோடு, குளிர்ச்சியான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

விஷயம் #6
ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்ளும் போது, காபி அல்லது டீ போன்றவற்றைக் குடிக்கக்கூடாது. இவைகள் மருந்தின் சக்தியைக் குறைத்துவிடும்.

விஷயம் #7
ஹோமியோபதி சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், சிட்ரஸ் பழங்கள் அல்லது புளிப்பான உணவுகள் அல்லது பானங்களை, மருந்து உட்கொண்ட பின் எடுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications