Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
பெட் சீட்டுக்கு கீழே ஏன் சோப்பு வெச்சு தூங்குறது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?
ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.
கடுமையான கால் வலியால் ஏற்படும் ஒரு நிலை தான் ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம். இந்த வகை கால் வலி இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான கால் வலி மாலை அல்லது இரவு நேரத்தில் தான் கடுமையாக இருக்கும்.
அமெரிக்காவில் 10 சதவீத மக்கள் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை இருந்தால், உட்காரவோ, தூங்கவோ, ரிலாக்ஸ் செய்ய கூட, கால்கள் ஒத்துழைக்காது. ஆனால் இந்த பிரச்சனைக்கு ஓர் எளிய மற்றும் விசித்திரமான இயற்கை தீர்வு ஒன்று உள்ளது. அதுக்குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் என்றால் என்ன?
இது ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.

தேவையான பொருட்கள்:
இந்த முறையை பின்பற்ற ஒரு புதிய குளியல் சோப்பு வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் சோப்பு மிகுந்த நறுமணத்துடன் இல்லாமல் இருப்பது நல்லது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
இரவில் படுக்கும் போது சோப்பை பெட் சீட்டிற்கு அடியில் வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து, இந்த சோப்பை வெளியே எடுத்து, கத்தியால் கீறி விட்டு, மீண்டும் பெட் சீட்டிற்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இந்த வழி வேலை செய்யுமா?
இதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. ஆனால் விலைமலிவான இந்த முறையால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது.

எப்படி வேலை செய்யும்?
பலரும் இந்த முறையைப் பின்பற்றுவதால், சோப்புக்களில் இருந்து வெளிவரும் குறிப்பிட்ட அயனிகள், அந்த கால் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாக நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications