Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இந்த செயல்கள் உங்கள் வாழ்நாளின் அளவை நீட்டிக்கும் என்பது தெரியுமா?
இங்கு வாழ்நாளின் அளவை நீட்டிக்க உதவும் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், நோய்கள் நிறைந்த சுற்றுச்சூழலாலும் பலரும் இளமையிலேயே நோய்களால் உயிரை இழக்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருவரது வாழ்நாளை அதிகரிக்க ஒருசில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். அந்த விஷயங்களைச் சொன்னால், நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே அவைகள் வாழ்நாளின் அளவை நீட்டிக்கும். சரி, இப்போது அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

புத்தகங்கள் படிக்கவும்
வாழ்நாளின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஆய்வு ஒன்றில், புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புத்தகப் புழுக்களின் வாழ்நாள் 23 மாதங்கள் நீடித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மிளகாய்
உணவில் மிளகாயை அதிகம் சேர்த்தால், வாழ்நாளின் அளவு அதிகரிக்கும் என்பது தெரியுமா? 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மிளகாயை உணவில் சேர்த்து வந்தோரின் இறப்பு விகிதம் 13% குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமூக சேவை
சமூக சேவைகளை அதிகம் செய்து வருவோரின் வாழ்நாள் நீடிப்பதாக 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் தாமாக முன்வந்து சமூக சேவைகளை செய்வோரின் இறப்பு விகிதம், சமூக சேவைகளை செய்யாதவர்களை விட குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

நல்ல சமூக வாழ்க்கை
நண்பர் கூட்டம் அதிகமாக கொண்டோரது வாழ்நாள் அதிகரிப்பதாக 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் தனிமையையே விரும்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து, அதுவே பலரது சந்தோஷத்தை சீர்குலைத்து, வாழ்நாளைக் குறைத்து விடுகிறதாம்.

கடவுள் நம்பிக்கை
பலரும் இது ஒரு மூடநம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி நிச்சயம் உள்ளது. அந்த சக்தியைத் தான் நாம் தெய்வ உருவங்களின் வடிவில் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் அப்படி வழிபடும் போது, மனம் ஒருநிலைப்படுத்தப்படுவதால், மனம் அமைதியாகி, உயிரைப் பறிக்கும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடக்கூடும்.

விரதம்
நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததற்கு காரணம், அவர்கள் அடிக்கடி மேற்கொண்ட விரதம் தான். இப்படி அடிக்கடி விரதம் மேற்கொள்ளும் போது, நம் நோயெதிர்ப்பு மண்டலம் புத்துயிர் பெறும், புற்றுநோயின் தாக்கம் குறையும், வயது அதிகரிக்கும் போது தாக்கும் நோய்களின் அபாயம் குறையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications