Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தரையில் படுத்து நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை வைப்பதால் நடக்கும் அதிசயம் குறித்து தெரியுமா?
தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும்.
பொதுவாக நாம் வாழைப்பழம் சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் வாழைப்பழத்தைப் போலவே, அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் மறைந்துள்ளன. இது தெரியாமல் நாம் இத்தனை நாட்கள் வாழைப்பழத் தோலை தூக்கி எறிந்து கொண்டிருக்கிறோம்.
வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் அழகாகும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதே வாழைப்பழத் தோலைக் கொண்டு அன்றாடம் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் தொல்லைமிக்க பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்பது தெரியுமா? அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தலைவலி
நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைவலி. தலைவலி வந்தால், அது தலைப்பகுதியை கடுமையாக பாதித்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் செய்துவிடும்.
சிலருக்கு தலையின் இரு பக்கமும், இன்னும் சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் வலிக்கவும் செய்யும். இப்படி ஒரு பக்கம் மட்டும் வலிப்பதற்கு ஒற்றைத் தலைவலி என்று பெயர்.

வாழைப்பழத் தோல்
தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:
* 1 வாழைப்பழத்தின் தோல்
* ஐஸ் கட்டிகள்
* ஒட்டும் டேப்

செய்முறை:
வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy

எப்படி வேலை செய்கிறது?
வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

குறிப்பு
ஒருவேளை தலைவலி 20 நிமிடத்திற்கும் மேல் நீடித்திருந்தால், மற்றொரு முறை இதைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிவிடும்.



Click it and Unblock the Notifications











