Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
மூல நோய், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் ஆகாயத்தாமரை!
ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள்
ஆகாயத்தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக காணப்படும். இதனை வீணான பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இதன் அற்புதமான பலன்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

புண்களுக்கு
ஆகாயத்தாமரையின் இலையை நன்றாக அரைத்து கரப்பான், தோல் நோய் போன்ற புண்களின் மீது வைத்துக்கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.

மூலநோய்
மூலநோய்க்கு மருந்து தேடி அலைபவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் கிடைக்க கூடியதும் கூட, மூலநோய்க்கு ஆசனவாயில் இதன் இலையின் சாறை வைத்து கட்டினால் குணமடையும்.

மார்பக பிரச்சனை
பெண்களின் மார்பினுள் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத்தாமரையின் இலை சாற்றை சிறிது தேன் கலந்து தினமும் காலை, மாலை குடித்தால் கிருமிகள் அழிந்துவிடும். மேலும் நீர் சுருக்கு, மூலம், சீதபேதி ஆகியவை குணமாகும்.

கண் எரிச்சலுக்கு..
ஆகாயத்தாமரையின் இலையின் சாறு 400 மில்லி மற்றும் நல்லெண்ணெய் 800 மில்லி சேர்த்து இளஞ் சூடாக தீயிட்டு காய்ச்சி, கிச்சிலி கிழங்கு, சந்தனதூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி என ஒவ்வொன்றையும் 8 கிராம் எடுத்து காய்ச்சி, குளிர்வித்து தினமும் காலை, மாலை தலைக்கு தேய்த்து வர உட்சூடு, கண் எரிச்சல், மூலம் ஆகியவை குணமாகும்.



Click it and Unblock the Notifications











