Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மூல நோய், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் ஆகாயத்தாமரை!
ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள்
ஆகாயத்தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக காணப்படும். இதனை வீணான பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இதன் அற்புதமான பலன்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

புண்களுக்கு
ஆகாயத்தாமரையின் இலையை நன்றாக அரைத்து கரப்பான், தோல் நோய் போன்ற புண்களின் மீது வைத்துக்கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.

மூலநோய்
மூலநோய்க்கு மருந்து தேடி அலைபவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் கிடைக்க கூடியதும் கூட, மூலநோய்க்கு ஆசனவாயில் இதன் இலையின் சாறை வைத்து கட்டினால் குணமடையும்.

மார்பக பிரச்சனை
பெண்களின் மார்பினுள் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத்தாமரையின் இலை சாற்றை சிறிது தேன் கலந்து தினமும் காலை, மாலை குடித்தால் கிருமிகள் அழிந்துவிடும். மேலும் நீர் சுருக்கு, மூலம், சீதபேதி ஆகியவை குணமாகும்.

கண் எரிச்சலுக்கு..
ஆகாயத்தாமரையின் இலையின் சாறு 400 மில்லி மற்றும் நல்லெண்ணெய் 800 மில்லி சேர்த்து இளஞ் சூடாக தீயிட்டு காய்ச்சி, கிச்சிலி கிழங்கு, சந்தனதூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி என ஒவ்வொன்றையும் 8 கிராம் எடுத்து காய்ச்சி, குளிர்வித்து தினமும் காலை, மாலை தலைக்கு தேய்த்து வர உட்சூடு, கண் எரிச்சல், மூலம் ஆகியவை குணமாகும்.



Click it and Unblock the Notifications