Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பல்வலி மற்றும் அல்சரை மணத்தக்காளி கீரையை கொண்டு எப்படி குணப்படுத்தலாம்?
அல்சர் மற்றும் பல் வலிக்கு மணத்தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மணித்தக்காளி கீரை நமது வீட்டிலேயே சாதாரணமாக வளரக்கூடியது. இது நமது ஊர்ப்பகுதிகளில் அதிகமாகவும், விலைமலிவாகவும் கிடைக்கும். இந்த மணித்தக்காளி கீரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மணித்தக்காளி கீரையை எப்படி மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பற்கள் ஆடுகிறதா?
பற்கள் வலிமையின்றி ஒரு சிலருக்கு ஆடும். இதனை தடுக்க மணித்தக்காளி கீரையை பச்சையாக சுத்தம் செய்து மென்றால் இந்த பற்கள் ஆட்டம் குறையும்.

அல்சர்
மணத்தக்காளி கீரையை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயமும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு வாய் கொப்பளித்தால், வாயில் இருக்க கூடிய அல்சர் குணமாகும். இந்த மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண்களும் குணமாகும்.

இரத்தம் கசிதல்
நீரிலே இட்டு காய்ச்சிய கீரையை வாயில் வைத்து அடக்கி வைத்துக்கொண்டால், பற்களில் இருந்து இரத்தம் கசிவதை இந்த கீரை கட்டுப்படுத்தும்.

வீக்கங்கள்
இந்த மணித்தக்காளி கீரையை எந்த விதத்தில் சாப்பிட்டாலும், மண்ணீரலில் ஏற்படும் வீக்கம், கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.

புண்களை ஆற்ற...
மணித்தக்காளி கீரை மற்றும் வெந்தயத்தை நீரில் ஈட்டு நன்றாக காய்ச்சி, அந்த தேநீரை குடிக்கும் போது, குடல் புண்கள் ஆறும். அதுமட்டுமில்லாமல், இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிதால், வாய்ப்புண்கள் ஆறும்.

இரும்பு சத்து
வெந்தயம் இரும்பு சத்து மாத்திரைகளுக்கு இணையாக செயல்படக்கூடியது. வெந்தயம் மற்றும் மணித்தக்காளி இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இந்த தேநீரை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications